முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் பெயரைக் கெடுக்க எதிர்க்கட்சிகள் சதி : வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பாரதிய ஜனதாவின் எழுச்சியை எதிர்க்கட்சிகளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

ஆதாரமற்றவை
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாக்குகள் பதிவாகும் வகையில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதில் அளித்துள்ள வெங்கய்ய நாயுடு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், பாரதிய ஜனதாவின் எழுச்சியை எதிர்க்கட்சிகளால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

வெங்கய்ய கேள்வி
பாரதிய ஜனதா தலைமையிலான அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வரும் நிலையில் அரசின் பெயரை கெடுக்க எதிர்க்கட்சிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் வெங்கய்ய நாயுடு கூறினார். எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும் போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எந்த முறைகேடு புகாரையும் முன் வைக்க வில்லை, ஆனால் பாரதிய ஜனதா வெற்றி பெறும் போது குற்றச்சாட்டு சொல்வது ஏன் எனவும் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்