முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி ஆண்டுவிழா

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி ஆண்டுவிழா, மற்றும் விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு.சின்னையா தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் கி.காளிதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) முனியன், உடற்கல்வி துறை அறிக்கை படித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிபபாளர் ரங்கராஜன் கல்லூரி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், கல்லூரி வாழ்க்கை என்பது மறக்க முடியாதது. கல்லூரி படிப்பை முடித்துச் செல்லும் நீங்கள் மேற்கொண்டு படியுங்கள். பணியை தேர்ந்தெடுக்கும்போது காவல்துறைக்கு முன்னுரிமை கொடுங்கள் நீங்கள் அனைவரும் சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக திகழ வேண்டும் இந்த நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது என்றார். விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேலாளரும் தி.மலை மாவட்ட விளையாட்டு அலுவலருமான க.புகழேந்தி பரிசு வழங்கினார். இந்த விழாவில் கிராமிய காவல்துறை டிஎஸ்பி தேவநாதன், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் உள்பட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்துறை இணை பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்