முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி குதிரைப்பந்தயம் தொடங்கியது தமிழ் புத்தாண்டு கோப்பையை சீப் ஆப் கமாண்ட் வென்றது

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் நேற்று தொடங்கிய குதிரைப்பந்தயத்தில் தமிழ் புத்தாண்டு கோப்பையை சீப் ஆப் கமாண்ட் குதிரை வென்றது.

                                    8 பந்தயங்கள்

கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் குதிரைப்பந்தய மைதானத்தி குதிரைப் பந்தயம் நடத்தப்படும். தமிழ் புத்தாண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் நடைபெறும் இக்குதிரைப்பந்தயம் சித்திரை முதல்நாளான நேற்று(14_ந் தேதி) தொடங்கியது. காலை 10.15 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரை 8 பந்தயங்கள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பந்தயத்திலும் 8 முதல் 12 குதிரைகள் வரை ஓடின.

                   தமிழ் புத்தாண்டு கோப்பை

முதல் பந்தயத்தில் ரஷ்மோர் குதிரை முதலிடம் பிடித்தது.                  

இரண்டாவது பந்தயத்தில் பியர்ல் நெக்லேல் குதிரையும், 3_வது பந்தயத்தில் மிஸ் மிரகில் குதிரையும், 4_வது பந்தயத்தில் அக்கிரீசிவ் அப்ரோச்

குதிரையும், 5_வது பந்தயத்தில் அக்கடமஸ் குதிரையும், 6_வது பந்தயத்தில் சீப் ஆப் கமாண்ட் குதிரையும், 7_வது பந்தயத்தில் நோபில் டியூன்

குதிரையும், 8_வது மற்றும் இறுதி பந்தயத்தில் என்ஜாய் தி குட்டைம்ஸ்

குதிரையும் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றன. இதில் 6_வது பந்தயத்தில் தமிழ் புத்தாண்டு கோப்பையை சீப் ஆப் கமாண்ட் குதிரை வென்றது. இந்த குதிரையில் பயிற்சியாளருக்கு பந்தய மைதான நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ் ரங்கராஜன் கோப்பையை வழங்கினார். அப்போது செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதேபோன்று ஒவ்வொரு பந்தயத்திலும் வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளரிடம் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்