எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : பதன்கோட், உரி போன்ற இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய புலனாய்வு அமைப்புகள் மீது பாராளுமன்ற குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு புலனாய்வு அமைப்புகளின் குறைபாடுகளே காரணமாகும் என்றும் பாராளுமன்ற குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்தாண்டு பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பதன்கோட் விமான நிலையும் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரியில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் நாட்டின் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தினர்.
பாராளுமன்ற நிலைக்குழு:
உள்துறை விவகாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இருக்கிறார். அவர் தலைமையிலான இந்த கமிட்டி கூறுகையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதுகுறித்து இந்திய புலனாய்வு அமைப்பானது இன்னும் விசாரணையை நடத்தி முடிக்கவில்லை. மேலும் பதன்கோட், உரி, பம்போரே பாரமுல்லா, நகடோ ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை முன்கூட்டியே கண்டுபிடித்து தாக்குதலை தடுக்க தவறியதற்கான காரணம் குறித்தும் தாக்குதலுக்கான ஆதாரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பு இதுவரை கூறவில்லை என்றும் நிலைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் நமது தேசிய புலனாய்வு அமைப்புகளின் குறைபாடுகளே காரணமாகும் என்றும் குழு தெரிவித்துள்ளது.
தாக்குதல்கள்:-
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானப்படை விமான தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் வீரமரணமடைந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 19 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
கடந்தாண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் படையினர் சென்ற வாகனத்தின் மீது பாம்போரே என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 வீரர்கள் பலியானார்கள். கடந்தாண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ராஷ்ட்ரீய ரைபிள் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் வீரமரணமடைந்தார். அதே மாவட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நாக்ரோடா என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
விரைவான விசாரணை:-
இந்த தாக்குதல் குறித்த விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அந்த பகுதிகளில் உள்ள புலனாய்வு அமைப்புகளிடத்தில் இருக்கும் குறைபாடுகள் குறித்து கண்டறிந்து அதை போக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் குழு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதற்கான காரணத்தை அறிய விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவுபடுத்த வேண்டும். தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக இருக்கும் இடங்களை கண்காணித்து அந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் கடந்தாண்டு 364 ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. இதில் 112 தடவை தீவிரவாதிகள் ஊடுருவல் செய்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஊடுருவல் முயற்சி 121 தடவைகள் நடந்துள்ளன. இதில் 33 தடைவை தீவிரவாதிகள் ஊடுருவல் செய்துள்ளனர் என்றும் குழு தெரிவித்துள்ளது.
சுரங்கப்பாதை:-
எல்லை நெடுகிலும் சுரங்கப்பாதைகள் அமைத்து அதன் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலும் அதிகரித்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கப்பாதை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகமானது புதிய தொழில்நுட்ப முறையை கையாண்டு தடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இந்தமாதிரி சுரங்கப்பாதை வழியாக ஊடுருவலை தடுக்க பல்வேறு வழிகளில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஊடுருவலை தடுத்து வருகின்றனர். அதுகுறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆராய வேண்டும் என்றும் பாராளுமன்ற நிலைக்குழு ஆலோசனை கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.