முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மாணவர்கள்- பாதுகாப்புப் படையினர் மோதல் : முதல்வர் மெகபூபா

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

காஷ்மீர்  - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது, "ஸ்ரீநகரிலுள்ள ஸ்ரீ பிரதாப் கல்லூரிக்கு அருகில் மாணவர்கள் கூட்டமாக திரண்டு நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் மாணவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் மாணவர்கள் கேட்கவில்லை. பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மாணவர்களை விரட்ட கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றார்.

மாணவர்கள் தரப்பில் இந்த மோதல் குறித்து கூறியபோது, "பாதுகாப்புப் படையினர் மாணவர்களை கடுமையாக தாக்கினர்" என்றனர். முன்னதாக சனிக்கிழமை காஷ்மீரில் போலீஸுருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் தரப்பில் 50 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி அறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்