முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கியில் வேலை மற்றும் லோன் வாங்கித்தருவதாகக் கூறி ரூ.1 கோடியே 82 லட்சம் மோசடி செய்தவர் கைது

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      சென்னை

சேலம், ஜலகண்டபுரம், தாரமங்களம் மெயின்ரோடு எண்.26 என்ற முகவரியில் மணிகண்டன், வ/24, என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ படித்துள்ளார். மணிகண்டன் கடந்த 2015ம் ஆண்டு தனக்கு அறிமுகமான கோயம்புத்தூரை சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவரை சென்னை, தம்பு செட்டி தெருவில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து வேலை தொடர்பாக பேசியுள்ளார், அப்போது சூர்யபிரகாஷ், மணிகண்டனிடம் வங்கியில் வேலை வாங்கிதருவதாகவும் அதற்கு ரூ. 6 லட்சத்து 80 ஆயிரம் ஆகும் என கூறியுள்ளார்.

 காவல் நிலையத்தில்

இதனை நம்பி மணிகண்டன் ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்தை சூர்யபிரகாஷிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சூர்யபிரகாஷ் சில நாட்களில் போலி பணி நியமன ஆணையை தயார்செய்து மணிகண்டனிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக மணிகண்டன் கடந்த 27.01.2015 அன்று என்-3 முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.முத்தையால்பேட்டை காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து மேற்படி மோசடியில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த சூர்யபிரகாஷ், வ/30, கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் என்பவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட சூர்யபிரகாஷ் மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகளில் வேலை வாங்கிதருவதாகவும், வங்கியில் லோன் வாங்கி தருவதாகவும் கூறி பல நபர்களிடமிருந்து மொத்தம் ரூ.1 கோடியே 82 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இவர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவிலும், மதுரை, அண்ணா நகர் காவல் நிலையத்திலும் மேலும் கோயம்புத்தூர், சிறுமுகை காவல் நிலையத்திலும் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட குற்றவாளி சூர்யபிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்