முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      ஈரோடு

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரி, நந்தா கல்வியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில்அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மணியன் 774 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி பேசியதாவது:

  உயர்ந்த கனவுகளுடன் சாதனைகளை நோக்கி உத்வேகத்துடன் இளைஞர்கள் போராட வேண்டும். கடும் உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய பணி, சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்தால் சாதனை புரிவது எளிது. உயர் பதவிகளை ஏற்கும்போது முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் உங்கள் லட்சியக் கனவுகள் நனவாகும்.

  இளைஞர் சமுதாயம் பல்வேறு ஜாதி, சமயங்கள், பகுதிகளால் மாறுபட்டு இருந்தாலும், ஒருங்கிணைந்து செயல்படும்போது சாதனை புரிவது எளிதாக இருக்கும். இளைஞர்கள் சக்தி ஒருங்கிணைந்தால் சாதனை படைக்கலாம் என்றார். பாரதியார் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதுகலை இயற்பியல் துறையில், மாணவி பூவிதா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

  விழாவுக்கு, நந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளைத் தலைவர் வெ.சண்முகன் தலைமை வகித்தார். கலைக் கல்லூரி முதல்வர் குப்புசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

  இதில், கல்லூரிச் செயலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, முதன்மை அலுவலர் ஆறுமுகம், கல்லூரி ஆலோசகர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.photo no1

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்