எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் விடுதலைப் போராட்ட வீரர், வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் எம் ரவி குமார் அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் எம் ரவி குமார் பேசியதாவது:-தூத்துக்குடி மாவட்டம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய தியாகிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். சுதேசி கப்பலோட்டிய வ.உ.சி அவர்களும், தனது பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டிய மகாகவிபாரதியாரும், இம்மாவட்டத்திற்கு சொந்தக்காரர்கள். இது போன்று வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் வெள்ளையத்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன் போன்றார் வரிசையில் வீரன் சுந்தரலிங்கமும் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் வெள்ளையனை எதிர்த்து போரிட்டார். வீரத்தளபதி சுந்தரலிங்கம் தனது வீரவாளை உருவி நான் உயிரோடு இருக்கும்வரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை தகர்க்கவோ, எதிரிகளை உள்ளே விடவோ ஒருபோதும் நடக்க விடமாட்டேன் என்று தனது வாளின் மீது சத்தியம் செய்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை காப்பதற்காகவே தன் உயிரை மாய்த்து வீரவரலாற்றில் இடம் பெற்றார். வீரன் சுந்தரலிங்கம் 247 ஆண்டுகளாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், அவருடைய வீரமும், சுதந்திரப்போராட்ட போர்குணமும், தியாகமும் ஆகும். போர் மூலமாகவும், அகிம்சை மூலமாகவும், வணிகத்தின் மூலமாகவும், எழுத்தின் மூலமாகவும் இப்படி பல விதமாக நம்மாவட்டத்தில் போராடி விடுதலையை நம் தலைவர்கள் பெற்;றுத்தந்துள்ளார்கள். இந்திய வரலாற்றில் முதல் இந்திய சுதந்திரப்போர் 1857-ல் வங்கதேசத்தில் ஆரம்பித்தது என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான முதல் சுதந்திரப்போர் 1799-லே பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் ஆரம்பித்து விட்டது. மேலும், இந்திய சுதந்திர வரலாற்றில் முதன் முதல் தற்கொலைப்படையினராய் உயிர்த்தியாகம் செய்தவர் வீரன் சுந்தரலிங்கம் ஆவார். வீரபாண்டிய கட்டபொம்மனும், வீரன் சுந்தரலிங்கமும் சாதி சமய வேறுபாடு இன்றி சுதந்திரத்திற்காக பாடுபட்டார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.தமிழ்நாடு அரசு தியாகிகளை கவுரவிக்க இதுபோன்ற அரசு விழாக்களை எடுத்து வருகிறது. சுதந்திரத்தின் மதிப்பை நமது வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரப்போராட்ட வீரர்களின் வீரத்தினை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்;க வேண்டும் என்பதற்காக அரசால் தியாகிகளுக்கு மணிமண்டபங்கள், தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பெற்ற சுந்திரத்தை போற்றும் வகையில் வருங்கால இளைஞர்கள் திகழ வேண்டும். இங்கு அமைந்துள்ள பீரங்கி மேடை மற்றும் வீரன் சுந்தரலிங்கம் முழு உருவ வெங்கலச் சிலை அமைப்பது கோரிக்கைகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- என தெரிவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுமூகபாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகையும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு உதவித்தொகையும், 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினையும், 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 9 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் ஒப்படைப்பும், 6 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் குடியிருப்புத்திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதற்கான உத்தரவுகளையும், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு பசுமை வீடுகளும், புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவியும், தனி நபர் கடன் உதவித்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு கடன் உதவிகளும், ஆக மொத்தம் 133 நபர்களுக்கு ரூபாய் 20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வீரன் சுந்தரலிங்கம் வழித்தோன்றல் பொன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன்;, கோவில்பட்டி கோட்டாச்சியர் திருமதி.பி.அனிதா, புதுவாழ்வுத்திட்ட மேலாளர் கர்ணன், ஓட்டப்பிடாரம் வட்டாச்சியர் நம்பிராயர்;, தனிவட்டாச்சியர் (ச.பா.தி) சுந்தரகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், கிரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் சாசேஜ்![]() 1 day 6 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 5 days 32 min ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 2 days ago |
-
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
24 Sep 2023திருப்பதி : திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-
பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார்
24 Sep 2023திருவனந்தபுரம் : பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் காலமானார். அவருக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
-
சட்டவிரோத பணிகளை செய்ய விரும்பாததால் பதவி விலகிய ட்ரூடோவின் பாதுகாப்பு குழு அதிகாரி
24 Sep 2023டொரண்டோ : சட்டவிரோத பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதால் கனடா பிரதமரின் பாதுகாப்புக் குழு பணியை ராஜினாமா செய்வதாக கார்போரல் புல்போர்ட் கூறியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட அதிபர் ஜோபைடன் : வெள்ளை மாளிகை தகவல்
24 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது.
-
சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது நல்ல முடிவு : இங்கிலாந்து பிரதமருக்கு டிரம்ப் பாராட்டு
24 Sep 2023வாஷிங்டன் : சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தளர்த்தியுள்ளது நல்ல முடிவு என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
-
தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
24 Sep 2023புதுடெல்லி : தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
2030-ம் ஆண்டுக்குள் ரூ. 9,000 கோடியில் சபரிமலைக்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டம்
24 Sep 2023திருவனந்தபுரம் : வரும் 2030-ம் ஆண்டுக்குள் ரூ. 9 ஆயிரம் கோடியில் சபரிமலைக்கு மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டம் : கர்நாடக நீர் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு
24 Sep 2023பெங்களூரு : காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் நடந்ததை போன்று பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடக நீர் பாதுகாப்பு அமை
-
சந்திராயனின் லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
24 Sep 2023பெங்களூரு : சந்திராயன் - 3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
-
சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி
24 Sep 2023பெலிட்வி : சோமாலியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 போலீசார் உட்பட 15 பேர் பலியானார்கள்.
-
பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கும் ரஷ்யா : வலைதளங்களில் வலுக்கும் கண்டனம்
24 Sep 2023மாஸ்கோ : தன் நாட்டு பள்ளி குழந்தைகளுக்கு ரஷ்யா போர் பயிற்சி அளித்து வருவதாக வெளியான தகவலையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் ரஷ்யாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-24-09-2023
24 Sep 2023 -
தெலுங்கானாவில் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் : மாநில தேர்தல் அதிகாரி தகவல்
24 Sep 2023ஐதராபாத் : தெலுங்கானாவில் அடுத்த 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.
-
புறாக்களை பராமரிக்கும் பணி: சென்னை ஆட்டோ டிரைவருக்கு மான் கீ பாத்தில் பிரதமர் பாராட்டு
24 Sep 2023சென்னை : புறாக்களை பாதுகாத்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.&nbs
-
கோழிக்கோட்டில் 10 நாட்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
24 Sep 2023திருவனந்தபுரம் : நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் இன்று முதல் மீண்டும் திறக்க கோழிக்கோடு மாவட்ட கலெக
-
வயநாடு தொகுதியில் போட்டியிட கூடாது : ராகுலுக்கு கம்யூனிஸ்டு எதிர்ப்பு
24 Sep 2023திருவனந்தபுரம் : வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
-
5,237 பேருக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
24 Sep 2023சென்னை : 5,237 பேருக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
சாந்திநிகேதன், ஒய்சாலா கோவில்களுக்கு இந்தியாவின் முயற்சியால் யுனெஸ்கோ அங்கீகாரம் : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
24 Sep 2023புதுடெல்லி : பிரதமர் மோடி, மான் கீ பாத் என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நேற்று 105-வது உர
-
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு : கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
24 Sep 2023சென்னை : இந்த ஆண்டு ரூ. 6,080 கோடியை இந்திய ரயில்வே ஒதுக்கியுள்ளதாக கவர்னர் ஆர்.என். ரவி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு பறக்கும் சாலை திட்டம் : அக்டோபரில் கட்டுமான பணிகள் தொடக்கம்,
24 Sep 2023சென்னை : சென்னை மதுரவாயால் துறைமுகம் இடையேயான பறக்கும் சாலை திட்டத்தின் கட்டுமான பணி அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.
-
நெல்லை -சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணித்த கவர்னர் தமிழிசை
24 Sep 2023திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் கலந்து கொண்ட புதுவை கவர்னர் தமிழிசை அந்த ரயிலில் ஏறி
-
வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி பேச்சு
24 Sep 2023புதுடெல்லி : வந்தேபாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி பேசினார்.
-
9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் : கர்நாடக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
24 Sep 2023பெங்களூரு : கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பேய் பொம்மையை கைது செய்த போலீசார் : மெக்சிகோவில் விநோதம்
24 Sep 2023மான்க்லோவா : சக்கி டால் எனப்படும் பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரையும் அவருடன் இருந்த பொம்மையையும் மெக்சிகோ போலீசார் கைது செய்த வீடியோ சமூக வலைதளங்
-
வாக்குறுதிகளை காப்பாற்றாத பா.ஜ.க.வை தமிழகத்தில் டெபாசிட் வாங்க விடக்கூடாது : காங்கேயம் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
24 Sep 2023திருப்பூர் : வாக்குறுதிகளை காப்பாற்றாத பா.ஜ.க.வை தமிழகத்தில் டெபாசிட் வாங்க விடக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.