முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் சிறைகளில் 1500 பாலஸ்தீன கைதிகள் தொடர் உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

டெல் அவிவ்  - இஸ்ரேல் முழுவதும் உள்ள சிறை களில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பாலஸ்தீனர்கள் உள்ளனர். பொய் வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிறைகளில் போதுமான வசதிகள் இல்லை என்றும் நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  இநநிலையில் மார்வன் பர்கோட்டி என்ற பாலஸ்தீன தலைவர் தலைமையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் நேற்றுமுதல் கால வரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸின் அரசியல் வாரிசாக மார்வன் பர்கோட்டி கருதப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்