எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், செம்மேடு, வல்வில் ஓரி அரங்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்புத்திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொல்லிமலை மலைவாழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நேற்று (18.04.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த வேளாண் பெருமக்களுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,தமிழக அரசு மாநில சமச்சீர் நிதி சிறப்புத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செய்து அதில் தேர்வு செய்யப்படுகின்ற பின்தங்கிய வட்டாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டு 5 வட்டாரங்கள் பின்தங்கிய வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் கொல்லிமலை வட்டாரம் மிகவும் பின்தங்கிய வட்டாரமாக தேர்வு செய்யப்பட்டு, இவ்வட்டாரத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் வேளாண்மைத்துறையின் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்பு திட்டத்தின் கீழ் தன்னார்வ தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அதன்மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளும், உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. கொல்லிமலை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை வளர்ச்சிக்காக ஒரே மாதிரியான பல்வேறு வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இதுபோன்ற பின்தங்கிய வட்டாரத்திற்கென தனிகவனம் செலுத்தி வேளாண்மைத்துறையின் பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் திட்டங்களை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக வழங்கி வருகின்றது. வேளாண் திட்டங்களையும், நவீன தொழில் நுட்பங்களையும் இத்தகைய விவசாயிகளுக்கு வழங்கி வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் மூலமாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. கொல்லிமலையில் நன்கு விளையக்கூடிய மிளகு, காபி போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்திட வேளாண் பெருமக்கள் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திட வேண்டும். மேலும் நஞ்சில்லா விவசாயம் என்பதற்கேற்ப இயற்கை வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் முழுமையாக ஈடுபடவேண்டும். மண் வளத்தையும், மனித இனத்தையும் காத்திட இயற்கை வேளாண் உற்பத்தி முறையில் விவசாயிகள் ஈடுபட்டால் அதிக இலாபம் ஈட்டமுடியும். அதன்மூலம் சமூதாயத்திற்கும் நஞ்சில்லா நல்லா பொருட்களை உற்பத்தி செய்து வழங்கவும் முடியும். எனவே வேளாண் பெருமக்கள் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்குவதோடு, அதன்மூலம் நல்ல வருவாயை ஈட்டி தங்களின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார். மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்புத்திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தானம் அறக்கட்டளையின் சார்பாக கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த 150 விவசாயிகளுக்கு ரூ.3,80,000 மதிப்பீட்டில் காபி, மிளகு, சவுக்கு கன்றுகளையும், 12 விவசாயிகளுக்கு ரூ.40,400 மதிப்பிலான கைத்தெளிப்பான் கருவிகளையும், 10 விவசாயிகளுக்கு ரூ.20,000 மதிப்பிலான தேனி வளர்ப்பு பெட்டிகளையும், 4 விவசாயிகளுக்கு ரூ.25,000 மதிப்பிலான இயற்கை மண்புழு உரம் தயாரிப்பிற்கான உபகரணங்களையும், 5 விவசாயிகளுக்கு ரூ.6,000 மதிப்பிலான நுண் உயிர் உரங்களையும், 10 விவசாயிகளுக்கு ரூ.2,300 மதிப்பிலான மண்வள அட்டைகளையும், 1 விவசாயிக்கு ரூ.8,618 மானியத்துடன் ரூ.18,098 மதிப்பீட்டில் நீர் இறைக்கும் மோட்டார் பம்பு செட் கருவியினையும், 1 வாழவந்தி நாடு மிளகு உற்பத்தி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு டி.விரிடி உற்பத்தி மையம் அமைப்பதற்கு ரூ.30,347 மதிப்பிலான இடுபொருட்களையும், ஒருங்கிணைந்த மேலாண்மைத்திட்டத்தின் கீழ் 8 மகளிர் மற்றும் ஆண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2.00 இலட்சம் சுழல்நிதிக்கான காசோலைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.59,853 மதிப்பிலான தெளிப்பு நீர் மற்றும் சொட்டுநீர் பாசனக்கருவிகளையும், வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.1,05,000 இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்காக காசோலைகளையும், 5 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், 6 நபர்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவு என இவ்விழாவில் மொத்தம் 224 பயனாளிகளுக்கு ரூ.8,86,978 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார். இவ்விழாவில் கொல்லிமலை வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சுப்பிரமணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கலியராஜ், சென்னை மாநில திட்டக்குழும (வேளாண்மை) துறைத்தலைவர் டாக்டர்.கே.ஆர்.ஜெகன்மோகன், மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குநர் பி.கணேசன். மாவட்ட திட்ட மைய செயலர் எம்.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாத பிரகாசம், கே.வி.கே.கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் (உழவியல் துறை) டாக்டர்.எஸ்.அழகுதுரை, டாக்டர்.சி.சர்மிளா பாரதி (தோட்டக்கலைத்துறை) கொல்லிமலை வேளாண்மை அலுவலர் டி.கௌதமன், தானம் அறக்கட்டளை திட்ட தலைவர்கள் எ.மதன்குமார் (மதுரை), எம்.சந்தானம் (சென்னை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தானம் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.ரமேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.