முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி கல்வித் துறையின் சார்பில் 25 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் பிஷப் உபகாரசாமி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில், மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 2017- 2018-ம் ஆண்டிற்கான 25 சதவீத ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்  மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி,   தலைமையில் நடைபெற்றது.

       இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்  பேசும்போது தெரிவித்ததாவது

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25மூ ஓதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதன்பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14-ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கை செய்யப்பட வேண்டும். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிடப்பட்டு வழிகாட்டுதல்களும் !கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.

மேலும், எதிர்வரும் 2017 - 2018-ம் கல்வியாண்டிற்கு திருப்பூர் மாவட்டத்திலுள்ள 306   சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிக் / மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி) நுழைவு நிலை (டுமுபு / ஐ ளுவன) வகுப்பில் 25மூ ஒதுக்கீட்டின் கீழ் 4,246 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியிலும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான

 

வசதி றறற.னபந.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.  விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைப்பேசி எண்ணிற்குக் குறுஞ் செய்தியாக அளிக்கப்படும்.

           நமது மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் / வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். இந்த மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.  வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர் / எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் / துப்புரவு தொழிலாளியின் குழந்தை / மாற்றுத் திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படவேண்டும். ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 18-ம் தேதிவரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேருவதற்கான வாய்ப்பினைச் சிறந்த முறையில் அலுவலர்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி கொடுத்து  வாழ்வில் முன்னேறுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர் காந்திமதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் லலிதா,  அனைத்துப் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்