முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 1.80 கோடி மக்களுக்கு நவீன மின்னனு அட்டைகள் தொடர்ந்து வழங்கப்படும் எம்.பி உதயகுமார் பேச்சு

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - தமிழகத்தில் 1.80 கோடி மக்களுக்கு நவீன மின்னனு அட்டைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று வத்தலக்குண்டில் எம்.பி உதயகுமார் பேசினார்

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலக்குண்டில் கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் கனவு திட்டமான சுமார்ட் கார்டு எனும் மின்னனு அட்டை வழங்கும் திட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார், திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டுவில் தொடரப்பட்டுள்ளது. கூட்டுறவு பண்டகசாலை தலைவர் துரைராஜ¢ தலைமை வகித்தார் துணை தலைவர் ஜெபராஜ், நிர்வாகிகள் ஆண்டிபால்சாமி, குமரேசன், ராஜேந்திரன், மூர்த்தி, ராஜாமணி, புஷ¢பம், ரோஜாபேகம், சுந்தரி, அழகுமலை, கூட்டுறவு பண்டகசாலை செயலர் அர்ச்சுனன், டி.எஸ்.ஓ முத்துராமன், ஆர்.ஐ துரைப்பாண்டி, பதிவாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி உதயகுமார் சிறப்புரையாற்றி நவீன் மின்னனு அட்டைகளை வழங்கி  அவர் பேசும் போது தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் கனவு திட்டமான சுமார்ட் கார்டு எனும் மின்னனு அட்டை வழங்கும் திட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார், திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டுவில் தொடரப்பட்டுள்ளது என்றார். தமிழகம் முழுவதும் தொடர்ந்து வழங்கப்படும் நிலக்கோட்டை தாலுகாவில் 16394 பேருக்கு வரப்பெற்று வழங்கப்பட்டுள்ளது மேலும் குடும்ப அட்டைகள் உள்ளவர்களுக்கு ஆதார் அட்டை சமர்பித்த அனைவருக்கு செல் மூலம் நம்பர் வழங்கப்படுகிறது அந்த எண்ணை பெற்றவர்கள் நவீன் மின் அட்டைகள் வாங்கி கொள்ளாலம். அப்படி வாங்கக தவறினால்

அந்த எண் தானாக அழிந்துவிடும் அதன்பின்பு 1967 என்ற இலவச தொலைபேசி மூலம் முறையான தகவல் தெரிவித்தால் மீண்டும் புதிய எண் வழங்கப்படும். அந்த நம்பர் வந்தவுடன் ஏழு நாட்கள்குள் வாங்கி கொள்ள வேண்டும் என்று கூறினார். ஒன்றிய செயலாளர் எம்.வி.எம்.பாண்டியன், நகர செயலாளர் பீர்முகமது, முன்னாள் யூனியன் சேர்மன் மோகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் நாகூர்கனி, ஒன்றிய மீனரவணி செயலாளர் ரத்தினம், சிறுபான்மை ஒன்றிய செயலாளர் ஜான், கூட்டுறவு அர்பன் வங்கி தலைவர் ஜெயப்பிரகாஷ், துணை தலைவர் வெங்கடேஷ், கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குநர் நல்லமுகமது, மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள், முடிவில் கூட்டுறவு சங்க செயலர் அர்ச்சுனன் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago