எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒர்த் அறக்கட்டளையில் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்கிட தொழிற்நிறுவனங்களுக்கான உணர்வூட்டும் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சி.அ.ராமன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:- தொழிற்சாலைகள் நிறைந்த வேலூர் மாவட்டத்தில் தொழிற்நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தனியார் தொழிற் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் குறைகளுக்கு ஏற்றார் போல் பணிகளை வழங்க வேண்டும். இவற்றை கடைபிடிக்க தொழிற்நிறுவனங்களுக்கு இந்த உணர்வூட்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதிகளில் நடத்தப்படவேண்டும். இவ்வாறு நடத்தப்பட்டால் இன்னும் பல தொழிற்நிறுவனங்கள் இதுபோன்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைக்கு வித்திட முடியும். மாற்றுத்திறனாளிகள் சாதாரண பொதுமக்களை காட்டிலும் மாற்றுத் திறன் கொண்டவர்களாக உடல் ஊணத்துடன் இருப்பவர்கள். ஆனால் உடல் குறைபாடுகளை தாண்டி பல்வேறு திறமைகளை ஆரோக்கிய மனிதனை விட அதிக அளவு திறமை கொண்டவர்களாக உள்ளனர். எடுத்துக்காட்டாக சேலத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞன் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்தியதே ஆகும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றை கண்காணிக்க அரசு முதன்மை செயலாளர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு புதுவாழ்வு, மகளிர் திட்டம், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவும் இவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. இதுபோல பல பன்னாட்டு மற்றும் பெரிய தொழிற்நிறுவனங்களும் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கும் உகந்த வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுத்து அவர்களின் வாழ்க்கைக்கும் உதவிட வேண்டும். ஏனென்றால் ஒரு மாற்றுத்திறனாளியை பராமரிக்க அவருடைய குடும்பமும் பெற்றோர்களும் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் கடந்த 2011 புள்ளி விவரப்படி 26 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் இருந்தனர். அவர்களில் 45 சதவிகிதம் பேர் காது கேளாத பேச இயலாதவர்கள் ஆவர். இந்த 45 சதவிகித்தினர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை தொழிற்நிறுவனங்கள் அளிக்க வேண்டும். மாற்றுத்தினாளிகளுக்கு இந்தியாவில் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்படும் ஒரே நிறுவனமான ஒர்த் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு உதவிகளையும் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்து வருகிறது. ஆகவே இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள தொழிற்நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் தன்னம்பிகையும் தனியாக சமுதாயத்தில் ஊக்கத்திறனை அளிக்கும் வகையில் அவர்களுக்கு நிறுவனத்தில் அவர்களின் திறமைக்கு ஏற்றாற்போல் பணி ஒதுக்கீடுகள் அளித்து தங்களின் சமுதாய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி, புதுவாழ்வு திட்ட மேலாளர் சம்பத்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் கருணாகரன், ஒர்த் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ஆர்.கார்த்திகேயன், மண்டல மேலாளர் மற்றும் ஒர்த் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு பள்ளி தாளாளர் செல்வி.விண்ணரசி கீதா, தொழில் மைய திட்ட மேலாளர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.