எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து உழவர் பெருமக்கள் வாழை சாகுபடியில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அதிக மகசூல் பெற்றிடும் வகையில் நேற்று (19.04.2017) வாழை சாகுபடியாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் வா.சம்பத், தொடங்கி வைத்தார். கருத்தரங்கினை தொடங்கி வைத்த கலெக்டர் பேசியதாவது. தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள். அந்த வகையில் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், விற்பனை வாய்ப்புகள் மற்றும் மதிப்பூட்டிய உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்தும் சாகுபடியாளர்கள் மற்றும் வேளாண்மை விஞ்ஞானிகளின் கருத்தரங்கு தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நுகர்வோர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை உற்பத்தி செய்து கொடுப்பதற்க்கு உற்பத்தியாளர்கள் தயாராக இருக்கவேண்டும். வாழ சாகுபடியில் நமது சிந்தனை, கண்ணோட்டம் மற்றும் செயல்பாடுகளில் மாறுதல் தோன்ற வேண்டும். சில ஆண்டுகளாக திசு வாழை செடிகளை சாகுபடியில் அதிகப்படுத்தி உள்ளது ஒரு முக்கியமான திருப்பமாகும். மத்திய மாநில அரசுகள் வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அதிக அளவில் காற்று வீசும் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விவசாயப் பெருமக்கள் பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.சரியான விருப்பமான ரகங்கள் சாகுபடிக்கு தேர்ந்தெடுப்பது வியாபாரம் சிறக்க உதவும். உள்ளூர் சந்தையில் நுகர்வோர் எந்த ரகங்களில் காய்கள் அல்லது பழங்களை விரும்புகிறார்கள் என்று தெரிந்து அந்த ரகங்களின் சாகுபடியில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும். இதே போன்று ஏற்றுமதி சந்தைகளில் விற்பனைக்கு ஏற்ற ரகங்கள் எவையென கண்டறிந்து சரியான ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு மிகுந்த ஏற்றம் காணப்படுகிறது. தற்பொழுது வாழை காயாக அல்லது கனியாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வாழைக்காய் மற்றும் வாழைப்பழத்திற்கு மதிப்பேற்றி பதனிடப்பட்ட பொருட்களான பழச்சாறு, பழக்கூழ், பழ மிட்டாய், ஜாம், உலர்ந்த துண்டுகள், சிப்ஸ், மாவு போன்றவை தயாரித்து விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கலாம். வாழை சார்ந்த பல்வேறு பதனிடும் தொழிற்சாலைகள் அமைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கிரரமபுறத்தில் வேலை வாய்ப்புகள் பெருகி பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம். வாழை பழங்களில் இருந்து பல்வேறு வகையான பதப்படுத்தப்பட்ட மதிப்பூட்டக்கூடிய பொருட்களை தயாரிப்பதற்கு உண்டான பயிற்சிகளை தர தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, விவசாயப் பெருமக்களும், வாழை சாகுபடியாளர்களும், ஏனையோரும் இக்கூட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழை சாகுபடியில் பபன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இந்த கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர் சௌந்தரராஜன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபு, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஜி.அஜீத்தன், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்க தலைவர் ஏ.பி.கருப்பையா, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பேராசிரியர் முனைவர்.கே.சூரியநாதசுந்திரம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சார்ந்த விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.