முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்க வெடிகுண்டு தாக்குதலில் இந்தியர்கள் 13 பேர் பலியானார்கள்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

காபூல்  - ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறித்து வைத்து அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 இந்தியர்கள் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "ஆப்கனில் நங்கர்கார் மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய அச்சின் மாவட்டத்திலுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ என்று கூறப்படும் மிகப்பெரிய குண்டை அமெரிக்க விமானம் வியாழக்கிழமை வீசியது. இதில் 80 மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர், இவர்களில் 13 பேர் இந்தியர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு மறுப்பு
ஆப்கன் ஊடகங்களின் இந்தச் செய்தியை இந்திய தேசியப் புலனாய்வு மையம்  முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் இது தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு காணாமல்போன கேரள இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக தேசியப் புலனாய்வு மையம் வெளியிட்ட குற்றப் பத்திரிகையிலும் காணாமல் போனவர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்