எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜ்கோட் : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கெய்ல், விராட் கோலி ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் இந்த சீசனில் 2-வது வெற்றியை பெற்றது.
8 அணிகள்
8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
20-வது லீக் ஆட்டம்
இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், குஜராத் லயன்சும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு அணியில் மீண்டும் முதுகுவலியால் அவதிப்படும் டிவில்லியர்ஸ் மற்றும் பத்ரீ நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ் கெய்ல், டிராவிஸ் ஹெட் திரும்பினர். குஜராத் அணியில் மூன்று மாற்றமாக ஜாசன் ராய், முனாப் பட்டேல், பிரவீன்குமார் ஆகியோர் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டனர்.
கெய்ல் அதிரடி
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், கேப்டன் விராட் கோலியும் களம் இறங்கினர். தவால் குல்கர்னியின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து கேப்டன் விராட் கோலி அதிரடிக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டார்.
சிக்சர் மழை
அதைத் தொடர்ந்து கிறிஸ் கெய்லின் பேட், ராக்கெட் வேகத்தில் சுழல ஆரம்பித்தது. முந்தைய தடுமாற்றத்திற்கு ஒட்டுமொத்தமாக விடைகொடுத்த அவர் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை கதறடித்த அவர் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விசுவரூபம் எடுத்த கெய்ல், சிக்சருடன் நடப்பு தொடரில் முதல் அரைசதத்தை கடந்தார்.
முதலில் ஆக்ரோஷமாக ஆடிய விராட் கோலி, அதன் பிறகு கெய்லுக்கு வாய்ப்பு அளித்து விட்டு எதிர்முனையில் நின்று ரசிக்க தொடங்கி விட்டார். வெய்ன் சுமித்தின் ஓவரிலும் கெய்ல் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார்.
கோலி அரை சதம்
குஜராத் பந்து வீச்சாளர்களை வெளுத்து கட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 122 ரன்களை (12.4 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. கெய்ல் 77 ரன்களில் (38 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) பாசில் தம்பியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். இதன் பின்னர் தனது 28-வது ஐ.பி.எல். அரைசதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி 64 ரன்களில் (50 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.
அடுத்து டிராவிஸ் ஹெட்டும், கேதர் ஜாதவும் கைகோர்த்து தொடக்க ஜோடி விட்டுக்சென்ற பணியை செவ்வனே செய்து முடித்தனர். இவர்களும் வாணவேடிக்கை காட்ட தவறவில்லை. அதன் மூலம் அணி 200 ரன்களை சுலபமாக கடந்தது.
213 ரன் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 30 ரன்களுடனும் (16 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேதர் ஜாதவ் 38 ரன்களுடனும் (16 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்த சீசனில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இது தான்.
பின்னர் ஆடிய குஜராத் அணியும், பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரன்வேட்டைக்கு குறை வைக்கவில்லை. ஒரு பக்கம் வெய்ன் சுமித் (1 ரன்), கேப்டன் சுரேஷ் ரெய்னா (23 ரன்), ஆரோன் பிஞ்ச் (19 ரன்), தினேஷ் கார்த்திக் (1 ரன்) ஆகியோர் வரிசையாக வெளியேறினாலும், மறுபுறம் பிரன்டன் மெக்கல்லம், பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஆனால் மெக்கல்லம் (72 ரன், 44 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) வீழ்ந்ததும் குஜராத்தின் நம்பிக்கை தகர்ந்து போனது.
பெங்களூரு வெற்றி
இறுதி கட்டத்தில் இஷான் கிஷன் (39 ரன், 16 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) போராடிய போதிலும் அது ரன் வித்தியாசத்தை குறைக்க உதவியதே தவிர, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லவில்லை. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணியால் 7 விக்கெட்டுக்கு 192 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 6-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். குஜராத்துக்கு விழுந்த 4-வது அடியாகும்.
இலக்கு கடினமானதே: ரெய்னா
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி தோல்வியில் இருந்து மீண்டு குஜராத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
ராஜ்கோட் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது. கிறிஸ் கெய்ல் 38 பந்தில் 77 ரன்னும் (5 பவுண்டரி, 7 சிக்சர்), விராட் கோலி 50 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), கேதர் ஜாதவ் 16 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பின்னர் விளையாடிய குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து கோலி ...
மெக்கல்லம் 44 பந்தில் 72 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), இஷாந் கிசான் 16 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரெய்னா 8 பந்தில் 23 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சஹால் 3 விக்கெட் வீழ்த்தினார். பெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 2-வது வெற்றியை ருசித்தது. இந்த வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கிறிஸ் கெய்ல் அபாரமாக விளையாடினார். நாங்கள் எதிர்பார்த்ததைவிட 30 ரன்கள் அதிகமாகவே எடுத்துவிட்டோம். பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. வெற்றி நீடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து ரெய்னா ...
குஜராத் லயன்ஸ் அணி 4-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரெய்னா கூறியதாவது:-
நாங்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்தோம். 200 ரன் என்பது எடுக்க கூடிய இலக்கு தான். 200 ரன்னுக்கு மேல் இலக்கு என்பது கடினமாதே. எங்களது பவுலர்கள் கூடுதலாக ரன்களை கொடுத்து விட்டனர். பந்துவீச்சு குறித்து மிகுந்த கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெங்களூர் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 23-ம் தேதியும், குஜராத் அணி நாளை கொல்கத்தாவையும் சந்திக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.