எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (19.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து பேசும் போது தெரிவித்ததாவது, சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகின்றது. பூமிக்கடியில் 75 அடி ஆழம் வரை உள்ள நீரையும் சீமைக்கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகிறது. இந்த மரத்தின் விதைகள், காய்கள் எதுவும் உபயோகப்படுவதில்லை. எதற்குமே பயன்படாத இயற்கை வளத்தை பாதிக்கின்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டுமென மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிப்பகுதிகள், நகராட்சிப்பகுதிகள், பொதுப்பணித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), நெடுஞ்சாலைத்துறை மற்றும் இதர இடங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் துண்டுப்பிரசுரங்கள், ஆட்டோக்கள் மூலம் விளம்பரங்கள், தண்டோரா, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தங்களது முழு பங்களிப்பை அளித்திட வேண்டுமென தொடர்ந்து கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட குளங்களில் 1328.230 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 547.500 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. ஊராட்சிப்பகுதிகளில் உள்ள குளங்களில் 1409.120 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 683.380 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொது ஃ புறம்போக்கு இடங்களில் 481.370 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 337.831 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் 738.592 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 339.490 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.மேலும் பொதுப்பணிப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் 3618.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 652.700 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆறுகளில் 1437.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 190.140 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 110.900 கி.மீட்டர் நீளத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 104.000 கி.மீட்டர் நீளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 41.700 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 4.560 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நகராட்சிப்பகுதிகளில் 148.090 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 131.650 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில் 118.060 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 71.830 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன என்றார்.இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இரா.பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) க.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.