எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் முன்னிலையில், மின்னனு குடும்ப அட்டைகளை(ஸ்மார்ட் கார்டு) வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் முன்னிலையில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம், ஒய்.220, மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் ஆயுதபடை நியாயவிலை கடையில் 323 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள். தற்போது 79 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் கார்டு) பெறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், 15 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் பெருவிளை நியாயவிலைக்கடையில் 1,121 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள். இதில் 354 நபர்களுக்கு ஸ்மார்டு கார்டு பெறப்பட்டு, 20 நபர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் கார்டு) இன்று வழங்கி, பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் பேசும்போது தெரிவித்ததாவது:- அம்மா அவர்களின் நல்லாசியுடன், மின்னனு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அம்மா மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஊக்கத்தொகைகள் வழங்கி, என்றும் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளார்கள். இந்தியாவிலேயே, இரண்டாவதாக தமிழ்நாட்டில் தான் மின்னனு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) மூலம், அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு, அம்மா பல்வேறு முயற்சிகள் எடுத்ததன் அடிப்படையில், இன்று ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள், நியாயவிலை கடைக்கு சென்று, எந்த ஒரு பொருள்கள் வாங்கினாலும், நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியில் குறுஞ்செய்தி (ளுஆளு) வரும். இதன் மூலம், நீங்கள் எந்த பொருட்கள், எந்தளவு வாங்கியுள்ளீர்கள் என்பதை, நீங்களே பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள், வாங்காத பொருட்களுக்கு, வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால், அதனை உடனடியாக மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டில் ஏதேனும் முகவரி மாற்றம் இருந்தால், றறற.வnpனள.பழஎ.in என்ற இணையதளத்தில், தாங்களே மாற்றி கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு அந்தந்த, நியாயவிலை கடையில் வந்து சேரும்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு ழவி மூலம், குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனை, நீங்கள் அந்த நியாயவிலைக் கடைகளில் பதிவேற்றம் செய்து, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் ஒருவேளை ழவி அழித்து விட்டால், இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால் (1967) மீண்டும் ழவி அனுப்பி வைக்கப்படும். மேலும், இணைய தளத்தில் சென்று நியாயவிலை கடையில் என்னென்ன பொருட்கள் தற்போது இருப்பு இருக்கிறது என்பதை, நீங்கள் பார்த்து கொள்ள முடியும். இதுவரை, ஆதார் எண் இணைக்காதவர்கள், உடனடியாக ஆதார் எண்ணை இணைத்து, ஸ்மார்ட் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று, பயன்பெறுமாறும், 140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி, தற்போது நமது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காகவும், குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பேச்சிப்பாறை அணையில் 48 அடி தண்ணீர் இருந்தால், எந்தளவு குடிநீர் வழங்கப்படுமோ, அதைபோல், தற்போது 2 அடி தண்ணீர் உள்ளபோதிலும், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்கிட, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஓரளவு குடிநீர் பற்றாகுறையினை தீர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, ஆயுதப்படை வளாகத்தில் மினரல் வாட்டர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அப்போது, அதற்கான திட்ட அறிக்கையினை தயாரித்து தரும்பட்சத்தில், உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம், அக்டோபர் இமயம் மற்றும் சக்தி மகளிர்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் கடனுதவிகளை (பணம் எடுக்கும் ரசீது) வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் சின்னம்மாள், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) பி. இராஜேந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் (ஆயுதபடை) சண்டீஸ்வரன், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் கோலப்பன், கனகராஜன், அரசு வழக்கறிஞர் ஞானசேகரன், நாஞ்சில் சந்திரன், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஆர். மோஷிதயான், அசோகன், செல்வகுமார், காஜா, தங்கம், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,