முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறவன்குடியிருப்பு ஆயுதப்படை நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு விஜயகுமார் எம்.பி. வழங்கினார்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார்  முன்னிலையில், மின்னனு குடும்ப அட்டைகளை(ஸ்மார்ட் கார்டு) வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ மாநிலங்களவை உறுப்பினர்  அ. விஜயகுமார்  முன்னிலையில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம்,    ஒய்.220, மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் ஆயுதபடை நியாயவிலை கடையில் 323 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள்.  தற்போது  79 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் கார்டு) பெறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில்,  15 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் பெருவிளை நியாயவிலைக்கடையில் 1,121 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள்.  இதில் 354 நபர்களுக்கு ஸ்மார்டு கார்டு பெறப்பட்டு,  20 நபர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் கார்டு) இன்று வழங்கி, பின்னர் மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார்  பேசும்போது தெரிவித்ததாவது:- அம்மா அவர்களின் நல்லாசியுடன், மின்னனு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் நடைபெற்று கொண்டிருக்கிறது.  அம்மா மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஊக்கத்தொகைகள் வழங்கி, என்றும் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளார்கள். இந்தியாவிலேயே, இரண்டாவதாக தமிழ்நாட்டில் தான் மின்னனு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) மூலம், அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு, அம்மா பல்வேறு முயற்சிகள் எடுத்ததன் அடிப்படையில், இன்று ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.  நீங்கள், நியாயவிலை கடைக்கு சென்று, எந்த ஒரு பொருள்கள் வாங்கினாலும், நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியில் குறுஞ்செய்தி (ளுஆளு) வரும்.  இதன் மூலம், நீங்கள் எந்த பொருட்கள், எந்தளவு வாங்கியுள்ளீர்கள் என்பதை, நீங்களே பார்த்துக்கொள்ள முடியும்.  நீங்கள், வாங்காத பொருட்களுக்கு, வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால், அதனை உடனடியாக மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டில் ஏதேனும் முகவரி மாற்றம் இருந்தால், றறற.வnpனள.பழஎ.in என்ற இணையதளத்தில், தாங்களே மாற்றி கொள்ள முடியும்.  ஸ்மார்ட் கார்டு அந்தந்த,  நியாயவிலை கடையில் வந்து சேரும்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு ழவி மூலம், குறுஞ்செய்தி அனுப்பப்படும்.  இதனை, நீங்கள் அந்த நியாயவிலைக் கடைகளில் பதிவேற்றம் செய்து, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.  நீங்கள் ஒருவேளை ழவி அழித்து விட்டால், இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால் (1967) மீண்டும்  ழவி அனுப்பி வைக்கப்படும்.  மேலும், இணைய தளத்தில் சென்று நியாயவிலை கடையில் என்னென்ன பொருட்கள் தற்போது இருப்பு இருக்கிறது என்பதை, நீங்கள் பார்த்து கொள்ள முடியும். இதுவரை, ஆதார் எண் இணைக்காதவர்கள், உடனடியாக ஆதார் எண்ணை இணைத்து, ஸ்மார்ட் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று, பயன்பெறுமாறும், 140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி, தற்போது நமது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காகவும், குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பேச்சிப்பாறை அணையில் 48 அடி தண்ணீர் இருந்தால், எந்தளவு குடிநீர் வழங்கப்படுமோ, அதைபோல், தற்போது 2 அடி தண்ணீர் உள்ளபோதிலும், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்கிட, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஓரளவு குடிநீர் பற்றாகுறையினை தீர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, ஆயுதப்படை வளாகத்தில் மினரல் வாட்டர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.  அப்போது, அதற்கான திட்ட அறிக்கையினை  தயாரித்து தரும்பட்சத்தில், உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம், அக்டோபர்   இமயம் மற்றும் சக்தி மகளிர்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் கடனுதவிகளை (பணம் எடுக்கும் ரசீது) வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர்  சின்னம்மாள், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்)  பி. இராஜேந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் (ஆயுதபடை)  சண்டீஸ்வரன், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர்  கோலப்பன்,  கனகராஜன்,  அரசு வழக்கறிஞர் ஞானசேகரன்,               நாஞ்சில் சந்திரன், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர்  ஆர். மோஷிதயான்,  அசோகன்,  செல்வகுமார்,  காஜா,  தங்கம்,  செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago