எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடர வழிவகை செய்யும், தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு விரைவாக ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற்தியுள்ளார். மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பல்மருத்துவ மேல்படிப்பு ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை (நீட்) நடத்தி அதன் மூலம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய முறையை வரும் ஆண்டில் இருந்து அமுல்படுத்த உள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால் நகர்ப்புற மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த 2 மசோதாக்களுக்கும் இன்னும் அனுமதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் மருத்துவக்கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டியிருக்கிறது. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் விரைந்து கிடைக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
மசோதாக்கள் நிறைவேற்றம்
அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு பல்மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல்மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கு தமிழகத்தில் பின்பற்றப்பட்ட அதே நிலை நீடிக்க வகை செய்யும்படி சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் கவர்னர் மூலம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்துவிட்டால் தமிழகத்தில் வழக்கம்போல் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு பல்மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நியாயமாகவும்,வெளிப்படையாகவும் நடக்க உதவும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
நல்ல மருத்துவ வசதி
தற்போதுள்ளபடி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களை தேர்வு மற்றும் அனுபவம் ரீதியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இந்த 50 சதவீதத்தில் பாதி அளவுக்கு பணி அனுபவம் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. மீதமுள்ள பாதி அளவுக்கு மருத்துவ பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை செய்தவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு அட்மிஷன் கொடுக்கப்படுகிறது. இதனால் கிராமப்புறம் மற்றும் மலைஜாதியினர்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது.
நீட் தேர்வு அமல்
இந்தநிலையில் நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை (நீட்) மத்திய கொண்டு வரும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956, மறறும் பல் மருத்துவ சட்டம் 1948 ஆகியவற்றில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களிலும் நீட் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும் என்றும் அந்த திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசு மேல்முறையீடு
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை விபரம் குறித்து வெளியிட்டுள்ள விபர தொகுப்பில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது நீட் தேர்வு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளானது இந்திய மருத்துவ கவுன்சில் முதுகலை மருத்துவ படிப்புக்கான 2000 -ம் ஆண்டு சட்டத்தில் 2017 மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும் விதிமுறைகளுக்கு முரண்பாடாக உள்ளது. இதனால் கிராமப்புற மக்களுக்கும், தொலைதூரத்தில் வசிக்கும் மக்களுக்கும் மருத்தவ வசதி கிடைக்காமல் போகும். மேலும் அரசு பணியில் உள்ள டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டின் ஒரு நீதிபதியை கொண்ட பெஞ்ச் பிறப்பித்துள்ள 2 உத்தரவில் இந்திய மருத்துவ கவுன்சிலின் 2000-ம் ஆண்டின் விதிமுறைகள் படிதான் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பில் அட்மிஷன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த 2 உத்தரவுகளையும் எதிர்த்து தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்ய உள்ளது.
தற்போதுள்ள நிலையே ...
கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியமாகும். அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது மாநில அரசின் ஒதுக்கீட்டின்படி இருக்க சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த 2 மசோதாக்களுக்கும் விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும். முதுநிலை மருத்துவ படிப்புக்கான மத்திய அரசின் நீட் வழிகாட்டுதலில் நீட் தேர்வை தவிர மாநில அரசின் கொள்கையில் தலையிட மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது பின்பற்றப்படவில்லை. தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 2 மசோதாக்களில் கூறப்பட்டுள்ளபடி மாநில அரசின் கொள்கைகளை இணைக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலின் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
பெரிதும் பாதிப்பு
மருத்துவ இளம்நிலை வகுப்புகளில் நீட் தேர்வு அடிப்படையில் அட்மிஷன் கொடுத்தால் மாநில தேர்வு வாரியம் மூலம் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களில் 98 சதவீதம் பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள மசோதாவில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மற்றும் இதர ஆதாரங்கள் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக தகுதி உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கட்டாயத்தால் இந்தாண்டு அட்மிஷன் கிடைக்காமல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவார்கள். இதனால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார உரிமை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் மாணவர்களிடத்தில் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல் ...
இந்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ மேற்படிப்பு பல் மருத்துவ மேல்படிப்புக்கான 2017-ம் ஆண்டு மசோதாவுக்கும் தமிழ்நாடு மருத்து கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கான மசோதா 2017-க்கும் விரைந்து ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.