எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடர வழிவகை செய்யும், தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு விரைவாக ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற்தியுள்ளார். மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பல்மருத்துவ மேல்படிப்பு ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை (நீட்) நடத்தி அதன் மூலம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய முறையை வரும் ஆண்டில் இருந்து அமுல்படுத்த உள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால் நகர்ப்புற மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த 2 மசோதாக்களுக்கும் இன்னும் அனுமதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் மருத்துவக்கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டியிருக்கிறது. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் விரைந்து கிடைக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
மசோதாக்கள் நிறைவேற்றம்
அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு பல்மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல்மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கு தமிழகத்தில் பின்பற்றப்பட்ட அதே நிலை நீடிக்க வகை செய்யும்படி சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் கவர்னர் மூலம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்துவிட்டால் தமிழகத்தில் வழக்கம்போல் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு பல்மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நியாயமாகவும்,வெளிப்படையாகவும் நடக்க உதவும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
நல்ல மருத்துவ வசதி
தற்போதுள்ளபடி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களை தேர்வு மற்றும் அனுபவம் ரீதியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இந்த 50 சதவீதத்தில் பாதி அளவுக்கு பணி அனுபவம் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. மீதமுள்ள பாதி அளவுக்கு மருத்துவ பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை செய்தவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு அட்மிஷன் கொடுக்கப்படுகிறது. இதனால் கிராமப்புறம் மற்றும் மலைஜாதியினர்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது.
நீட் தேர்வு அமல்
இந்தநிலையில் நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை (நீட்) மத்திய கொண்டு வரும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956, மறறும் பல் மருத்துவ சட்டம் 1948 ஆகியவற்றில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களிலும் நீட் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும் என்றும் அந்த திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசு மேல்முறையீடு
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை விபரம் குறித்து வெளியிட்டுள்ள விபர தொகுப்பில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது நீட் தேர்வு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளானது இந்திய மருத்துவ கவுன்சில் முதுகலை மருத்துவ படிப்புக்கான 2000 -ம் ஆண்டு சட்டத்தில் 2017 மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும் விதிமுறைகளுக்கு முரண்பாடாக உள்ளது. இதனால் கிராமப்புற மக்களுக்கும், தொலைதூரத்தில் வசிக்கும் மக்களுக்கும் மருத்தவ வசதி கிடைக்காமல் போகும். மேலும் அரசு பணியில் உள்ள டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டின் ஒரு நீதிபதியை கொண்ட பெஞ்ச் பிறப்பித்துள்ள 2 உத்தரவில் இந்திய மருத்துவ கவுன்சிலின் 2000-ம் ஆண்டின் விதிமுறைகள் படிதான் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பில் அட்மிஷன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த 2 உத்தரவுகளையும் எதிர்த்து தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்ய உள்ளது.
தற்போதுள்ள நிலையே ...
கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியமாகும். அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது மாநில அரசின் ஒதுக்கீட்டின்படி இருக்க சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த 2 மசோதாக்களுக்கும் விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும். முதுநிலை மருத்துவ படிப்புக்கான மத்திய அரசின் நீட் வழிகாட்டுதலில் நீட் தேர்வை தவிர மாநில அரசின் கொள்கையில் தலையிட மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது பின்பற்றப்படவில்லை. தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 2 மசோதாக்களில் கூறப்பட்டுள்ளபடி மாநில அரசின் கொள்கைகளை இணைக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலின் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
பெரிதும் பாதிப்பு
மருத்துவ இளம்நிலை வகுப்புகளில் நீட் தேர்வு அடிப்படையில் அட்மிஷன் கொடுத்தால் மாநில தேர்வு வாரியம் மூலம் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களில் 98 சதவீதம் பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள மசோதாவில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மற்றும் இதர ஆதாரங்கள் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக தகுதி உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கட்டாயத்தால் இந்தாண்டு அட்மிஷன் கிடைக்காமல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவார்கள். இதனால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார உரிமை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் மாணவர்களிடத்தில் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல் ...
இந்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ மேற்படிப்பு பல் மருத்துவ மேல்படிப்புக்கான 2017-ம் ஆண்டு மசோதாவுக்கும் தமிழ்நாடு மருத்து கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கான மசோதா 2017-க்கும் விரைந்து ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.