எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடர வழிவகை செய்யும், தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு விரைவாக ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற்தியுள்ளார். மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பல்மருத்துவ மேல்படிப்பு ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை (நீட்) நடத்தி அதன் மூலம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய முறையை வரும் ஆண்டில் இருந்து அமுல்படுத்த உள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால் நகர்ப்புற மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த 2 மசோதாக்களுக்கும் இன்னும் அனுமதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் மருத்துவக்கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டியிருக்கிறது. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் விரைந்து கிடைக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
மசோதாக்கள் நிறைவேற்றம்
அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு பல்மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல்மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கு தமிழகத்தில் பின்பற்றப்பட்ட அதே நிலை நீடிக்க வகை செய்யும்படி சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் கவர்னர் மூலம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்துவிட்டால் தமிழகத்தில் வழக்கம்போல் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு பல்மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நியாயமாகவும்,வெளிப்படையாகவும் நடக்க உதவும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
நல்ல மருத்துவ வசதி
தற்போதுள்ளபடி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களை தேர்வு மற்றும் அனுபவம் ரீதியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இந்த 50 சதவீதத்தில் பாதி அளவுக்கு பணி அனுபவம் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. மீதமுள்ள பாதி அளவுக்கு மருத்துவ பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை செய்தவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு அட்மிஷன் கொடுக்கப்படுகிறது. இதனால் கிராமப்புறம் மற்றும் மலைஜாதியினர்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது.
நீட் தேர்வு அமல்
இந்தநிலையில் நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை (நீட்) மத்திய கொண்டு வரும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956, மறறும் பல் மருத்துவ சட்டம் 1948 ஆகியவற்றில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களிலும் நீட் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும் என்றும் அந்த திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசு மேல்முறையீடு
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை விபரம் குறித்து வெளியிட்டுள்ள விபர தொகுப்பில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது நீட் தேர்வு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளானது இந்திய மருத்துவ கவுன்சில் முதுகலை மருத்துவ படிப்புக்கான 2000 -ம் ஆண்டு சட்டத்தில் 2017 மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும் விதிமுறைகளுக்கு முரண்பாடாக உள்ளது. இதனால் கிராமப்புற மக்களுக்கும், தொலைதூரத்தில் வசிக்கும் மக்களுக்கும் மருத்தவ வசதி கிடைக்காமல் போகும். மேலும் அரசு பணியில் உள்ள டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டின் ஒரு நீதிபதியை கொண்ட பெஞ்ச் பிறப்பித்துள்ள 2 உத்தரவில் இந்திய மருத்துவ கவுன்சிலின் 2000-ம் ஆண்டின் விதிமுறைகள் படிதான் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பில் அட்மிஷன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த 2 உத்தரவுகளையும் எதிர்த்து தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்ய உள்ளது.
தற்போதுள்ள நிலையே ...
கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியமாகும். அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது மாநில அரசின் ஒதுக்கீட்டின்படி இருக்க சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த 2 மசோதாக்களுக்கும் விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும். முதுநிலை மருத்துவ படிப்புக்கான மத்திய அரசின் நீட் வழிகாட்டுதலில் நீட் தேர்வை தவிர மாநில அரசின் கொள்கையில் தலையிட மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது பின்பற்றப்படவில்லை. தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 2 மசோதாக்களில் கூறப்பட்டுள்ளபடி மாநில அரசின் கொள்கைகளை இணைக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலின் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
பெரிதும் பாதிப்பு
மருத்துவ இளம்நிலை வகுப்புகளில் நீட் தேர்வு அடிப்படையில் அட்மிஷன் கொடுத்தால் மாநில தேர்வு வாரியம் மூலம் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களில் 98 சதவீதம் பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள மசோதாவில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மற்றும் இதர ஆதாரங்கள் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக தகுதி உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கட்டாயத்தால் இந்தாண்டு அட்மிஷன் கிடைக்காமல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவார்கள். இதனால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார உரிமை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் மாணவர்களிடத்தில் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல் ...
இந்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ மேற்படிப்பு பல் மருத்துவ மேல்படிப்புக்கான 2017-ம் ஆண்டு மசோதாவுக்கும் தமிழ்நாடு மருத்து கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கான மசோதா 2017-க்கும் விரைந்து ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.