எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்தில் வருவாய் துறை சார்பாக தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் ப.தனபால் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்
ஏழை எளிய, அடிமட்ட மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கில் அம்மா பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வழங்கிவந்தார்கள் இன்றும் அவர்களின் வழியில் நடக்கின்ற அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது. அதனடிப்படையில் அவினாசி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி இந்த தொகுதியினை சிறந்த சட்டமன்ற தொகுதியாக மாற்றிடும் வகையில் உங்களுக்காக முனைப்புடன் செயல்பட்டு தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளின்படி செயலாற்றி வருகிறேன். அதிலும் குறிப்பாக இப்பகுதி மக்கள் என்னிடம் அவினாசி அத்திக்கடவு திட்டத்தை வழியுறுத்தியதன் அடிப்படையில் மீண்டும் அம்மா அவர்களிடம் தேர்தல் முடிந்ததும் இத்திட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்து அனுமதி பெற்றுதுடன் மத்திய அரசிற்கு நிதி ஒதுக்கீடு பெற கருத்துரு அனுப்பியதோடு விட்டுவிடாமல் தமிழக அரசு பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக 2017-2018 நிதியாண்டில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்ள இதே பகுதியில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகள் மேற்கொள்ள ரூ.3523 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வறட்சி பகுதிகளிலுள்ள ஏரிகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடிநீர் செறிவுட்டப்பட்டு பாசன வசதிகளை மேம்படுத்தப்படும்.
வறட்சி காலங்களில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு சீரான முறையில் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. மேலும், நிரந்தர தீர்வாக மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் வழியாக அவினாசிக்கு குடிநீர் வழங்க மூன்றாவது கூட்டு குடிநீர்த்திட்டம் அமைக்க திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இத்திட்டப்பணிகளானது ஒன்றறை ஆண்டுகள் முடிக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும். இதுபோன்ற மக்களின் தேவைக்கான அனைத்து திட்டங்களும் உரிய முறையில் சரியான நேரத்தில் செய்து தரப்படும்.
மேலும், அன்னூர் வட்டாட்சியர் கட்டட பணிகள் நடைபெற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அன்னூர் பேரூராட்சி பேருந்து நிலைய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புற வழிச்சாலை அமைக்க நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இன்று நடைபெற்ற விழாவில் வீட்டுமணை பட்டா 173 பயணாளிகளுக்கு ரூ.13.49 இலட்சம் மதிப்பிலும், பட்டா மாறுதல் 15 பயணாளிகளுக்கும், பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு 500 மின்னனு குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயணாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொக 1 பயணாளிக்கு ரூ.10,000-மும் திருமண உதவித்தொகை 3 பயணாளிகளுக்கு ரூ.26,000-மும், 92 மாணவ மாணவியர்களுக்கு ரூ.2.15இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகையும், வேளாண்மைத்துறையின் மூலம் டிரக்டர் மற்றும் உழவு உபகரணங்கள் மானியமாக ரூ.10.58 இலட்சம் மதிப்பில் 9 பயணாளிகளுக்கும், பிற்படுத்ப்பட்டோர் நலத்துறையின் மூலம் சலவைப்பெட்டி, தையல் இயந்திரம் ரூ.39,050 மதிப்பில் 10 பயணாளிகளுக்கும் என மொத்தம் 828 பயணாளிகளுக்கு ரூ.27.23 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்டம் வழங்கப்படுகின்றது.
மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் மேல்கதவக்கரை, காக்காப்பாளையம், நல்லக்கவுண்டம்பாளையம், அருவங்காடு நால்ரோடு, பு.சு.பு கல்லூரி ஆகிய குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் விதமாக 6 புதிய வழித்தடங்களை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற மக்களின் அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் சுரேஷ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இ.கோவிந்த ராஜ், துணை மேலாளர் (வணிகம்) சாய் கிருஷ்ணன், அன்னூர் வட்டாட்சியர் ராஜன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.