முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.65.22 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.65.22 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.75 இலட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.37.73 இலட்சம் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தரமான பொருட்களை கொண்டு தார்சாலை அமைக்கப்பட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4.74 இலட்சம் மதிப்பீட்டில் வீரசங்கிலி குளத்தினை தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது  தூர்வாரும் மண்ணினை கரையின் மேற்புறம் கொட்டப்பட்டு கரையினை பலப்படுத்துவதோடு, குளத்தின் உள்புறம் முழுவதுமாக தூர்வாரப்பட்டு சமப்படுத்தவேண்டுமென ஊரக வளர்ச்சி துறை அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் வள்ளிபுரம் ஊராட்சி கோவில்புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  அவர்கள பார்வையிட்டு ஆய்வு செய்து இச்சேவை மைய கட்டிடத்தின்  பயன்பாட்டினையும், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக செயல்படும் விதத்தினையும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களிடம் மாவட்ட கலெக்டர்  கேட்டறிந்தார்.

                இந்த ஆய்வின்போது கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஜி.உமா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பி.சாந்தி, உதவி பொறியாளர்கள் எம்.விஜயகுமார், எஸ்.பர்கத், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago