எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள அரசு உப்பு நிறுவனத்தில் ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய சுத்திகரிப்பு தொழிற்சாலையினை அமைச்சர்கள் சம்பத் மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு உப்பு நிறுவன வளாகத்தில் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ஆகியோர், தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு உப்புநிறுவன மேலாண்மை இயக்குநர் ஹர்சஹாய் மீனா திட்ட விளக்கவுரையாற்றினார். மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையுரையாற்றினார். விழாவில், அமைச்சர் சம்பத் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாவட்டமாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான 5504.12 ஏக்கர் நிலம் கொண்ட கால குத்தகை அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு வணிக உற்பத்தியினை தொடங்கிய இந்நிறுவனம் படிப்படியாக தனது உற்பத்தியினை விரிவாக்கம் செய்து வருகிறது. முதலில் தொழிலக தர உப்பு உற்பத்தியை தொடங்கி, பின்னர் பலவகை செறிவூட்டப்பட்ட உப்பினை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 1350 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் மற்றும் 300 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் 2016-17 ஆம் நிதியாண்டில் 2,18,450 டன் தொழிலக தரமுடைய உப்பினை உற்பத்தி செய்துள்ளது. இந்நிறுவனம் உற்பத்தி செய்கின்ற இருவித (இரும்பு மற்றும் அயோடின்) செறிவூட்டப்பட்ட உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு மற்றும் குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு ஆகியவற்றினை 'அம்மா உப்பு" என்ற பெயரில் 11.06.2014 அன்று முதல் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அம்மா உப்பு என்ற அதே பெயரில் அயோடின் கலந்த கல் உப்பினை வெளிச்சந்தையில் நவம்பர் 2014-இல் விற்பiனையினை துவங்கியது. பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு மேற்கூறிய உப்பு வகைகளை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்வதற்காக பிப்ரவரி 2015-இல் இருந்து விநியோகம் செய்து வருகின்றது. இத்திட்டம் துவங்கிய நாள் முதல் இதுவரை 49,314 டன் அம்மா உப்பு வெளிச்சந்தை மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2012-2013ஆம் ஆண்டு தொழில் மானிய கோரிக்கையின் பொழுது தமிழ்நாடு உப்பு நிறுவனம் அதன் உப்பு விற்பனை அளவினை அதிகரித்திட உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தில் நிறுவும் என்ற அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் டாட்டா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தின் கீழ் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 150 நபர்களுக்கு நேரடியாகவும், 50 நபர்களுக்கு மறைமுகமாகவும் கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் இழப்பீட்டு உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால உதவித்தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் புதிதாக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் துவங்கப்பட்டு நிறைவேற்றப்படுவதன் மூலம் இச் ஜவுளி பூங்காவில் 30 முன்னணி ஜவுளி நிறுவனங்கள் ரூ.450 கோடி மதிப்பில் முதலீடு செய்து ஜவுளி தொழிற்சாலை துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினைப் பெருக்கி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் விதமாக புதிய தொழிற்சாலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாகவும் வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் தொழிலக தர உப்பு , பலவகை செறிவூட்டப்பட்ட உப்பு என இரண்டு விதமாக ஆண்டொன்றிற்கு 40ஆயிரம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. நாம் உட்கொள்ளும் உப்பு வகை அயோடின் குறைபாடு உள்ள உப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே நுண்ணூட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட உப்பினை பயன்படுத்திட வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை பெருக்கிடும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் டாடா டிரஸ்ட் செயல் தாளாளர் ஆர்.வெங்கடரமணன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டி, தமிழ்நாடு உப்புநிறுவன பொதுமேலாளர் கு.டில்லிகுமார், நிறுவன செயலாளர் தயானந்தன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முனியசாமி, ராம்கோ கூட்டுறவுத் தலைவர் செ.முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய பிரிவு கர்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், உள்பட அரசு அலுவலர்கள், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், டாடா டிரஸ்ட் நிறுவனத்தைச் சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.