எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள அரசு உப்பு நிறுவனத்தில் ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய சுத்திகரிப்பு தொழிற்சாலையினை அமைச்சர்கள் சம்பத் மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு உப்பு நிறுவன வளாகத்தில் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ஆகியோர், தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு உப்புநிறுவன மேலாண்மை இயக்குநர் ஹர்சஹாய் மீனா திட்ட விளக்கவுரையாற்றினார். மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையுரையாற்றினார். விழாவில், அமைச்சர் சம்பத் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாவட்டமாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான 5504.12 ஏக்கர் நிலம் கொண்ட கால குத்தகை அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு வணிக உற்பத்தியினை தொடங்கிய இந்நிறுவனம் படிப்படியாக தனது உற்பத்தியினை விரிவாக்கம் செய்து வருகிறது. முதலில் தொழிலக தர உப்பு உற்பத்தியை தொடங்கி, பின்னர் பலவகை செறிவூட்டப்பட்ட உப்பினை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 1350 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் மற்றும் 300 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் 2016-17 ஆம் நிதியாண்டில் 2,18,450 டன் தொழிலக தரமுடைய உப்பினை உற்பத்தி செய்துள்ளது. இந்நிறுவனம் உற்பத்தி செய்கின்ற இருவித (இரும்பு மற்றும் அயோடின்) செறிவூட்டப்பட்ட உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு மற்றும் குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு ஆகியவற்றினை 'அம்மா உப்பு" என்ற பெயரில் 11.06.2014 அன்று முதல் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அம்மா உப்பு என்ற அதே பெயரில் அயோடின் கலந்த கல் உப்பினை வெளிச்சந்தையில் நவம்பர் 2014-இல் விற்பiனையினை துவங்கியது. பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு மேற்கூறிய உப்பு வகைகளை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்வதற்காக பிப்ரவரி 2015-இல் இருந்து விநியோகம் செய்து வருகின்றது. இத்திட்டம் துவங்கிய நாள் முதல் இதுவரை 49,314 டன் அம்மா உப்பு வெளிச்சந்தை மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2012-2013ஆம் ஆண்டு தொழில் மானிய கோரிக்கையின் பொழுது தமிழ்நாடு உப்பு நிறுவனம் அதன் உப்பு விற்பனை அளவினை அதிகரித்திட உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தில் நிறுவும் என்ற அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் டாட்டா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தின் கீழ் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 150 நபர்களுக்கு நேரடியாகவும், 50 நபர்களுக்கு மறைமுகமாகவும் கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் இழப்பீட்டு உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால உதவித்தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் புதிதாக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் துவங்கப்பட்டு நிறைவேற்றப்படுவதன் மூலம் இச் ஜவுளி பூங்காவில் 30 முன்னணி ஜவுளி நிறுவனங்கள் ரூ.450 கோடி மதிப்பில் முதலீடு செய்து ஜவுளி தொழிற்சாலை துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினைப் பெருக்கி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் விதமாக புதிய தொழிற்சாலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாகவும் வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் தொழிலக தர உப்பு , பலவகை செறிவூட்டப்பட்ட உப்பு என இரண்டு விதமாக ஆண்டொன்றிற்கு 40ஆயிரம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. நாம் உட்கொள்ளும் உப்பு வகை அயோடின் குறைபாடு உள்ள உப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே நுண்ணூட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட உப்பினை பயன்படுத்திட வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை பெருக்கிடும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் டாடா டிரஸ்ட் செயல் தாளாளர் ஆர்.வெங்கடரமணன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டி, தமிழ்நாடு உப்புநிறுவன பொதுமேலாளர் கு.டில்லிகுமார், நிறுவன செயலாளர் தயானந்தன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முனியசாமி, ராம்கோ கூட்டுறவுத் தலைவர் செ.முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய பிரிவு கர்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், உள்பட அரசு அலுவலர்கள், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், டாடா டிரஸ்ட் நிறுவனத்தைச் சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.