எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள அரசு உப்பு நிறுவனத்தில் ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய சுத்திகரிப்பு தொழிற்சாலையினை அமைச்சர்கள் சம்பத் மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு உப்பு நிறுவன வளாகத்தில் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ஆகியோர், தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு உப்புநிறுவன மேலாண்மை இயக்குநர் ஹர்சஹாய் மீனா திட்ட விளக்கவுரையாற்றினார். மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையுரையாற்றினார். விழாவில், அமைச்சர் சம்பத் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாவட்டமாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான 5504.12 ஏக்கர் நிலம் கொண்ட கால குத்தகை அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு வணிக உற்பத்தியினை தொடங்கிய இந்நிறுவனம் படிப்படியாக தனது உற்பத்தியினை விரிவாக்கம் செய்து வருகிறது. முதலில் தொழிலக தர உப்பு உற்பத்தியை தொடங்கி, பின்னர் பலவகை செறிவூட்டப்பட்ட உப்பினை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 1350 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் மற்றும் 300 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் 2016-17 ஆம் நிதியாண்டில் 2,18,450 டன் தொழிலக தரமுடைய உப்பினை உற்பத்தி செய்துள்ளது. இந்நிறுவனம் உற்பத்தி செய்கின்ற இருவித (இரும்பு மற்றும் அயோடின்) செறிவூட்டப்பட்ட உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு மற்றும் குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு ஆகியவற்றினை 'அம்மா உப்பு" என்ற பெயரில் 11.06.2014 அன்று முதல் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அம்மா உப்பு என்ற அதே பெயரில் அயோடின் கலந்த கல் உப்பினை வெளிச்சந்தையில் நவம்பர் 2014-இல் விற்பiனையினை துவங்கியது. பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு மேற்கூறிய உப்பு வகைகளை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்வதற்காக பிப்ரவரி 2015-இல் இருந்து விநியோகம் செய்து வருகின்றது. இத்திட்டம் துவங்கிய நாள் முதல் இதுவரை 49,314 டன் அம்மா உப்பு வெளிச்சந்தை மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2012-2013ஆம் ஆண்டு தொழில் மானிய கோரிக்கையின் பொழுது தமிழ்நாடு உப்பு நிறுவனம் அதன் உப்பு விற்பனை அளவினை அதிகரித்திட உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தில் நிறுவும் என்ற அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் டாட்டா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தின் கீழ் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 150 நபர்களுக்கு நேரடியாகவும், 50 நபர்களுக்கு மறைமுகமாகவும் கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் இழப்பீட்டு உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால உதவித்தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் புதிதாக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் துவங்கப்பட்டு நிறைவேற்றப்படுவதன் மூலம் இச் ஜவுளி பூங்காவில் 30 முன்னணி ஜவுளி நிறுவனங்கள் ரூ.450 கோடி மதிப்பில் முதலீடு செய்து ஜவுளி தொழிற்சாலை துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினைப் பெருக்கி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் விதமாக புதிய தொழிற்சாலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாகவும் வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் தொழிலக தர உப்பு , பலவகை செறிவூட்டப்பட்ட உப்பு என இரண்டு விதமாக ஆண்டொன்றிற்கு 40ஆயிரம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. நாம் உட்கொள்ளும் உப்பு வகை அயோடின் குறைபாடு உள்ள உப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே நுண்ணூட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட உப்பினை பயன்படுத்திட வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை பெருக்கிடும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் டாடா டிரஸ்ட் செயல் தாளாளர் ஆர்.வெங்கடரமணன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டி, தமிழ்நாடு உப்புநிறுவன பொதுமேலாளர் கு.டில்லிகுமார், நிறுவன செயலாளர் தயானந்தன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முனியசாமி, ராம்கோ கூட்டுறவுத் தலைவர் செ.முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய பிரிவு கர்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், உள்பட அரசு அலுவலர்கள், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், டாடா டிரஸ்ட் நிறுவனத்தைச் சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.