எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - மதுரை மாவட்ட வறட்சி பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ - ஆர்.பி.உதயகுமார் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்ட வறட்சி பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தினை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமையில் மதுரை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்கே.ராஜு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது :-
இன்று வறட்சி பாதித்த பகுதிகளில் அரசின் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. தற்பொழுதுள்ள வறட்சி கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 1426ஆம் ஆண்டு பசலி உடைய நிலவரியை இன்றைக்கு நமது தமிழ்நாடு அரசு வறட்சியின் காரணமாக ரத்து செய்துள்ளது. அதே போல கூட்டுறவு வங்கிகளின் மூலமாக வழங்கப்பட்ட ரூ.3028 கோடி மத்தியக்கால பயிற்கடனை நீண்ட கால கடனாக மாற்றி அமைத்த பெருமை நமது தமிழ்நாடு அரசையே சாரும். தற்பொழுது தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 32,30,191 விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் இடுப்பொருள் நிவாரணம் வழங்கியதும் நமது தமிழ்நாடு அரசு தான். 2015-16ல் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.5208 கோடி ரூபாய் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல் தற்பொழுது வழங்குகின்ற கடன்களையும் வட்டியில்லா கடனாக மாற்றி உள்ளது. மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 21443 விவசாயிகளுக்கு ரூ.30.22 கோடி ரூபாய் இடுப்பொருள் உதவித்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக தீவன பற்றாக்குறை கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனையும் இதற்காக ரூ.6.91 கோடி விடுவிக்கப்பட்டு ஏற்கனவே அதற்கான தீவனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு கூடுதலாக ரூ.20 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது.
2016ல் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் அம்மா ரூ.5280.25 கோடி பயிர்க்கடனை ரத்து செய்தார். இதன் மூலம் 12,02,075 விவசாயிகள் பயன்பெற்றனர். வனவிலங்குகளுக்கு குடிநீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில் அவைகளுக்கென தீவன வசதி, குடிநீர் வசதியை செய்து தருவதற்காக சிறு தொட்டிகள் கடடுவதற்காக ரூ.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு அதற்கான திட்டங்களும் செயல்படுத்தி வருகிறது. நமது தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை தற்பொழுது 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறையை போக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.170 கோடி ரூபாய் ஒதுக்கி குடிநீர் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையின் மூலமாக நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்த ரூ.28 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோடைக்கால குடிநீர் தேவையை போக்கும் பொருட்டு மாநில பேரிடர் நிதியிலிருந்து ஏற்கனவே ரூ.105 கோடி விடுவிக்கப்பட்டதோடு மேலும் ரூ.100 கோடி கூடுதலாக இன்றைக்கு விடுவித்து அந்த பணிகளும் இன்றைக்கு தங்கு தடையின்றி குடிநீர் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வசதியுடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து திட்டம் 2016-17ம் ஆண்டு 30 மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1519 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் தற்பொழுது ரூ.300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது :-
பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இருந்து மக்களை எந்த ஒரு துயரமும் அடையக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதன் மூலம் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் நோக்கமானது மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை முற்றிலுமாக துடைத்தெறிந்து அதன் மூலமாக மக்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே ஆகும். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 32 இலட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கு எடுக்கப்பட்டு அதற்கு தேவைப்படுகின்ற இடுப்பொருள் நிவாரண உதவி தொகையாக ரூ.2,247 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை முழுமையாக அந்த அந்த பகுதிகளுக்கு தாலுகா வாரியாக, நாம் எப்படி வெற்றிகரமாக மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கின்றோம் என்பதை பற்றி ஆய்வு செய்வதற்காகவே ஆகும். மேலும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத்திட்டத்திற்காக ரூ.411 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாநிலமும் செய்யாத ஒன்றாக வங்கிக்கணக்கிலே வரவு வைக்கும் ஒரே அரசு நமது தமிழகஅரசு தான். ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறையை பொறுத்த வரையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. ஆனால் நமது மாவட்ட நிர்வாகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு குடிதண்ணீர் பிரச்சனையை சமாளிக்க மாற்று கருத்தினை தெரிவித்து அதற்காக பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் ரூ.10 கோடியும், மாநகராட்சியின் மூலம் ரூ.11 கோடியும் பெற்று தண்ணீர் இருக்க கூடிய விவசாய நிலங்களை கண்டு அறிந்து அந்த நில உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அங்கு ஆழ்துறை கிணறுகள் அமைத்து அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இது பாராட்டத்தக்க ஒன்றாகும்.
மேலும், மதுரை மாவட்டத்தில் பல்வேறு குடிமராமத்துப் பணிகள் பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்காக பேரிடர் மேலாண்மையின் மூலம் ரூ.6 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மானிய விலையில் அதற்கான தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மேலும் ரூ.20 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீரை பொருத்தவரையில் மாநில பேரிடர் மேலாண்மையின் மூலம் முதற்கட்டமாக ரூ.105 கோடி ரூபாயும் சமீபத்தில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆய்வுக்கூட்டத்தில் மேலும் ரூ.100 கோடி ரூபாய் குடிநீருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த நமது முன்னாள் முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110ம் விதியின் கீழ் அறிவித்த திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும் தற்பொழுது ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அடுத்த மூன்று வருடங்களுக்குள் மதுரை மாவட்டத்திற்கு ரூ.800 கோடி ரூபாய் செலவில் அம்ருத் திட்டம் குடிநீருக்காக ஒதுக்கப்பட உள்ளது. இதிலிருந்து மதுரை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அவர்கள் நமது மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு நிதி பெற்றுத் தருகிறேன் என்று கூறியுள்ளார்கள். இது வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.இராஜன்செல்லப்பா (மதுரை வடக்கு), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்), பி.நீதிபதி (உசிலம்பட்டி), பி.பெரியபுள்ளான் (மேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரி,கூடுதல் கலெக்டர் ரோஹிணிராம்தாஸ், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.