எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 564 பயனாளிகளுக்கு ரூ.36 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, . முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார்கள்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்றப் பேரவைத் தலைவர் பேசியதாவது
மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசு தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் அம்மா தான் அடிப்படை காரணியாக விளங்குகிறார். வகுத்த வழியில் தான் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் அவிநாசி தொகுதி மக்களுக்காக இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். பொது மக்களாகிய தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்கின்ற மனுக்கள் மீது பரீசீலனை செய்து துரிதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சட்டமன்றப் பொது தேர்தலின்போது வாக்கு சேகரிக்க சென்றபோது இப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர். அதன்படி, இத்தொகுதி மக்களின் நல்ஆதரவுடன் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபின் சட்டமன்றப் பேரவைத்தலைவராக 2-வது முறையாக பதவியேற்ற போது மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களிடம் நான் வைத்த முதல் கோரிக்கையே அவிநாசி - அத்திக்கடவு திட்டமாகும். இத்திட்டத்திற்காக முதற் கட்டமாக ரூ.250ஃ-கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் விரைவில் நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தொகுதியில், இக்கல்வியாண்டில் மாணவ, மாணவியர்களுக்காக புதிதாக அரசு கலைக்கல்லூரியும் அமையவுள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடற்ற ஏழை , எளிய மக்களுக்காக புதிய பேருந்து நிலையம் அருகில் 1000 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டுவதற்கான நடவடிக்கையும் , புதிய தீயணைப்பு நிலையமும் மற்றும் போக்குவரத்து பணிமனை அமைப்பதற்கான நடவடிக்கையும் துரிதமான முறையில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவிநாசி தொகுதி பொது மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன் எனவும் அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் தெரிவித்தார்கள்.
இன்று நடைபெற்ற விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.11,66,905ஃ- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 119 பயனாளிகளுக்கு ரூ.14,28,000ஃ- மதிப்பில் முதியோர் உதவித் தொகையினையும், 304 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளும் 15 பயனாளிகளுக்கு அரசுப் பணியில் இல்லை என சான்றும் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ.32,250ஃ- மதிப்பில் கல்வி உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.20,000ஃ- மதிப்பில் திருமண உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.25,000ஃ- மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையினையும், 6 பயனாளிகளுக்கு ரூ. 60,000ஃ- மதிப்பில் இயற்கை மரண உதவித் தொகையினையும், தோட்டக்கலை துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2,00,000ஃ- மதிப்பில் சிற்பம் கட்டும் கூடத்திற்கான மானியமும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு இடுபொருட்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 27 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.6,26,975ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 564 பயனாளிகளுக்கு ரூ.35,59,130ஃ- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் வழங்கினார்கள்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் அவிநாசி முதல் நட்டுக்குட்டையான்புதூர், வையாபுரிக்கவுண்டன்புதூர், கிளாகுளம் பிரிவு மற்றும் சேவூர் வழியாக நம்பியூர் வரையிலான புதிய பேருந்து வழித்தடத்தினையும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.வி.எஸ்.குமார், துணை கலெக்டர்கள் சுகவனம், பழனியம்மாள், மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் ஜெகதீசன், அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சுப்ரமணியம், சேவூர் வேலுச்சாமி, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.