எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 564 பயனாளிகளுக்கு ரூ.36 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, . முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார்கள்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்றப் பேரவைத் தலைவர் பேசியதாவது
மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசு தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் அம்மா தான் அடிப்படை காரணியாக விளங்குகிறார். வகுத்த வழியில் தான் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் அவிநாசி தொகுதி மக்களுக்காக இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். பொது மக்களாகிய தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்கின்ற மனுக்கள் மீது பரீசீலனை செய்து துரிதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சட்டமன்றப் பொது தேர்தலின்போது வாக்கு சேகரிக்க சென்றபோது இப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர். அதன்படி, இத்தொகுதி மக்களின் நல்ஆதரவுடன் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபின் சட்டமன்றப் பேரவைத்தலைவராக 2-வது முறையாக பதவியேற்ற போது மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களிடம் நான் வைத்த முதல் கோரிக்கையே அவிநாசி - அத்திக்கடவு திட்டமாகும். இத்திட்டத்திற்காக முதற் கட்டமாக ரூ.250ஃ-கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் விரைவில் நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தொகுதியில், இக்கல்வியாண்டில் மாணவ, மாணவியர்களுக்காக புதிதாக அரசு கலைக்கல்லூரியும் அமையவுள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடற்ற ஏழை , எளிய மக்களுக்காக புதிய பேருந்து நிலையம் அருகில் 1000 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டுவதற்கான நடவடிக்கையும் , புதிய தீயணைப்பு நிலையமும் மற்றும் போக்குவரத்து பணிமனை அமைப்பதற்கான நடவடிக்கையும் துரிதமான முறையில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவிநாசி தொகுதி பொது மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன் எனவும் அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் தெரிவித்தார்கள்.
இன்று நடைபெற்ற விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.11,66,905ஃ- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 119 பயனாளிகளுக்கு ரூ.14,28,000ஃ- மதிப்பில் முதியோர் உதவித் தொகையினையும், 304 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளும் 15 பயனாளிகளுக்கு அரசுப் பணியில் இல்லை என சான்றும் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ.32,250ஃ- மதிப்பில் கல்வி உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.20,000ஃ- மதிப்பில் திருமண உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.25,000ஃ- மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையினையும், 6 பயனாளிகளுக்கு ரூ. 60,000ஃ- மதிப்பில் இயற்கை மரண உதவித் தொகையினையும், தோட்டக்கலை துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2,00,000ஃ- மதிப்பில் சிற்பம் கட்டும் கூடத்திற்கான மானியமும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு இடுபொருட்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 27 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.6,26,975ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 564 பயனாளிகளுக்கு ரூ.35,59,130ஃ- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் வழங்கினார்கள்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் அவிநாசி முதல் நட்டுக்குட்டையான்புதூர், வையாபுரிக்கவுண்டன்புதூர், கிளாகுளம் பிரிவு மற்றும் சேவூர் வழியாக நம்பியூர் வரையிலான புதிய பேருந்து வழித்தடத்தினையும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.வி.எஸ்.குமார், துணை கலெக்டர்கள் சுகவனம், பழனியம்மாள், மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் ஜெகதீசன், அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சுப்ரமணியம், சேவூர் வேலுச்சாமி, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.