எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 564 பயனாளிகளுக்கு ரூ.36 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, . முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார்கள்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்றப் பேரவைத் தலைவர் பேசியதாவது
மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசு தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் அம்மா தான் அடிப்படை காரணியாக விளங்குகிறார். வகுத்த வழியில் தான் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் அவிநாசி தொகுதி மக்களுக்காக இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். பொது மக்களாகிய தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்கின்ற மனுக்கள் மீது பரீசீலனை செய்து துரிதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சட்டமன்றப் பொது தேர்தலின்போது வாக்கு சேகரிக்க சென்றபோது இப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர். அதன்படி, இத்தொகுதி மக்களின் நல்ஆதரவுடன் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபின் சட்டமன்றப் பேரவைத்தலைவராக 2-வது முறையாக பதவியேற்ற போது மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களிடம் நான் வைத்த முதல் கோரிக்கையே அவிநாசி - அத்திக்கடவு திட்டமாகும். இத்திட்டத்திற்காக முதற் கட்டமாக ரூ.250ஃ-கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் விரைவில் நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தொகுதியில், இக்கல்வியாண்டில் மாணவ, மாணவியர்களுக்காக புதிதாக அரசு கலைக்கல்லூரியும் அமையவுள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடற்ற ஏழை , எளிய மக்களுக்காக புதிய பேருந்து நிலையம் அருகில் 1000 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டுவதற்கான நடவடிக்கையும் , புதிய தீயணைப்பு நிலையமும் மற்றும் போக்குவரத்து பணிமனை அமைப்பதற்கான நடவடிக்கையும் துரிதமான முறையில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவிநாசி தொகுதி பொது மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன் எனவும் அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் தெரிவித்தார்கள்.
இன்று நடைபெற்ற விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.11,66,905ஃ- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 119 பயனாளிகளுக்கு ரூ.14,28,000ஃ- மதிப்பில் முதியோர் உதவித் தொகையினையும், 304 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளும் 15 பயனாளிகளுக்கு அரசுப் பணியில் இல்லை என சான்றும் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ.32,250ஃ- மதிப்பில் கல்வி உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.20,000ஃ- மதிப்பில் திருமண உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.25,000ஃ- மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையினையும், 6 பயனாளிகளுக்கு ரூ. 60,000ஃ- மதிப்பில் இயற்கை மரண உதவித் தொகையினையும், தோட்டக்கலை துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2,00,000ஃ- மதிப்பில் சிற்பம் கட்டும் கூடத்திற்கான மானியமும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு இடுபொருட்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 27 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.6,26,975ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 564 பயனாளிகளுக்கு ரூ.35,59,130ஃ- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் வழங்கினார்கள்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் அவிநாசி முதல் நட்டுக்குட்டையான்புதூர், வையாபுரிக்கவுண்டன்புதூர், கிளாகுளம் பிரிவு மற்றும் சேவூர் வழியாக நம்பியூர் வரையிலான புதிய பேருந்து வழித்தடத்தினையும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.வி.எஸ்.குமார், துணை கலெக்டர்கள் சுகவனம், பழனியம்மாள், மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் ஜெகதீசன், அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சுப்ரமணியம், சேவூர் வேலுச்சாமி, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கலெக்டர்களுடன் ஆலோசனை
23 Apr 2024சென்னை, தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று 12 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
23 Apr 2024சென்னை, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.