முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரழிவை ஏற்படுத்தும் 3-ம் உலகப்போர் நிச்சய நடக்கும்: அன்றே கூறிய பாபா வாங்கா !

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

பல்கேரியா - உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக நிகழ்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என உலக நிகழ்வுகளை முன்கூட்டிய கணிக்கும் பாபா வாங்கா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கேரிய நாஸ்டர்டாம்
பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கபடுகிறார்.இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன நடந்தும் உள்ளன.

3-ம் உலகப் போர் ?
 2017-ம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் பகைமை அதிகரித்து வருவதால் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா? என்ற அச்சமும் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற கணிப்புகள்
1) 2016 ஆண்டு மிகபெரிய இஸ்லாமிய போர் தெடங்கும் ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர்.அவர்கள்  2043 ஆம் ஆண்டு  ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள். எனவும் கூறி உள்ளார்
2)  2018 ஆம் ஆண்டு சீனா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறும் என கூறி உள்ளார். அவர் கூறியபடி சமீப வருடங்களாக பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் சீனா வல்லமை பெற்று வருகிறது.
3) பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும் என கூறி உள்ளார் அது  2023 க்கு முன் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.
4) 2028 மனிதன் சுக்கிரன்  கிரகத்திற்கு பறப்பான்  அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.
5)  2033 உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்
6) 2043  ஐரோப்பா  முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும் ரோம் அவர்களின் தலைநகராகும்.
7) 2072 மற்றும் 2086க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்
8) 2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில்  பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும்,  உலகில் கடலுக்கு அடியில் நகரங்கள் உருவாகும் வேற்று கிரகவாசிகளின் கண்டு பிடிப்புகள் அதிபயங்கரமான கண்டு பிடிப்பு நடக்கும்
9) 2262-ம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில்  நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லீம் அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.
10) 2341 இல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும் பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரியகுடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.
11) 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள்  நடக்கும்  மனிதர்களுக்கு இறப்பே கிடையாது,வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கபடுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச  சிதறி ஓடுவார்கள்.
12) 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்