எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் வறட்சிப் நிவாரண பணிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபில் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லட்சுமி. முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கலெக்டர் சி.அ.ராமன், வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்பட்டு வரும் தமிழக அரசு இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சியை சமாளித்திட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவிகளும் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேவையான உடனடி நிதியுதவிகளையும் போர்க்கால அடிப்படையில் வழங்கி வறட்சி காலத்தை சமாளித்து வருகிறது. தற்போது தமிழக அரசு அனைத்து திட்டப்பணிகளை காட்டிலும் குடிநீர்ப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்ற அறிவுரைகள் வழங்கி அதன்படி அனைவரும் செயலாற்றி வருகிறீர்கள். இருந்த போதிலும் மேலும் அதிக கவனம் செலுத்தி மாவட்டத்தில் எங்கெல்லாம் குடிநீர்ப் பிரச்சனை ஏற்படுகிறதோ அவற்றை தீர்;த்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றி பொதுமக்களுக்கு உதவிட வேண்டுமென்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் உத்திரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லட்சுமி, பேசியதாவது:- வேலூர் மாவட்டத்தில் மேட்டூர் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலமாக குடிநீர் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் ஊராட்சி ஒன்றிய கிராமப்பகுதிகளில் திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அளவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட துறைகளின் மூலமாக சொந்த ஆழ்துளை கிணறுகள் வாயிலாகவும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் குடிநீரானது பகுதியின் முதல் இடத்திலிருந்து கடைசி இடம் வரை ஒரு குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட குடிநீரின் அளவு கிடைக்கின்றதா என்பதை ஆய்வு செய்து சீரான குடிநீர் விநியோகம் நடைபெறுவதை அலுவலர்கள் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றால் அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள அலுவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். மேலும் இவற்றில் ஏதேனும் குறைகளோ ஆலோசனைகளோ இருந்தால் அவற்றை கலெக்டர் மூலமாக தெரிவிக்கலாம் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லட்சுமி, இ.ஆ.ப., தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கலெக்டர் சி.அ.ராமன், திட்டப்பணிகள் குறித்து விவரித்ததாவது:-
வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சராசரி மழையின் அளவை விட குறைந்தளவே கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை போக்க 3 மாதங்களுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து குடிநீரை பெற பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஜீன் மாதம் வரை குடிநீர் சீராக வழங்க நீராதாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வறட்சி காலத்தை எதிர்கொள்ள ஊராட்சிகள் மூலம் 32 பணிகள்;, 14-வது நிதிக்குழு நிதியின் மூலம் 62 பணிகள்;, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 76 பணிகள்;, ஊராட்சி ஒன்றிய நிதியின் மூலம் 33 பணிகள், மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் 4 பணிகள், சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 65 பணிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 16 பணிகளும் ஆக மொத்தம் 288 பணிகள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இவற்றில் 157 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 131 பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் ஊராட்சி ஒன்றிய கிராமப்பகுதிகளில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு அனைவருக்கும் சீராக வழங்கிட நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை மனதில் கொண்டு அவற்றை நிறைவேற்றி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஜி.பார்த்திபன், ஆர்.பாலசுப்பிரமணி, ஜி.லோகநாதன், ஜெயந்தி பத்மநாபன், பா.கார்த்திகேயன், ஏ.பி.நந்தகுமார், ஜே.எல்.ஈஸ்வரப்பன், ஏ.நல்லதம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பெ.பெரியசாமி, திருப்பத்தூர் சார் கலெக்டர் மரு.கார்த்திகேயன், இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர்கள் சுமேஷ் சோமன், தேஜஸ்ஸ்ரீ, ஆவின் தலைவர் வேலழகன், வருவாய் கோட்டாட்சியர்கள் அஜய் சீனிவாசன், இரா.இராஜேஸ்வரி, மாநகராட்சி ஆணையாளர் குமார், மண்டல இயக்குநர் நகராட்சி நிர்வாகம் குபேந்திரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திருமேனி, (ஊராட்சிகள்) விஜயகுமாரி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.