எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைக்கு மாற்றாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை 125 குடும்ப அட்டைதாரர்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.
பழைய குடும்ப அட்டை
இந்நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தலைமையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் மின்னணு குடும்ப அட்டை வழங்கி தெரிவித்ததாவது: அம்மா திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதில் மட்டும் சாதனையாளராக விளங்கவில்லை. அந்த திட்டங்கள், கடைகோடி பாமர மக்களுக்கும் தடையில்லாமல் பலனளிக்கிறதா என்று கண்காணிக்கும் வல்லமை கொண்டவராக இருந்தார்கள். அதனால் தான் மக்களுக்கு பயனளிக்கும் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக கணினிமயமாக்கி, ஆதார் எண் விவரங்களுடன் அவர்களுக்கு தடையின்றி, தட்டுபாடின்றி உணவுப் பொருட்களை வழங்கிட ஆவன செய்தார்கள். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் தற்போதைய குடும்ப அட்டைக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி 1.4.2017 முதல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்சமயம் 7 இலட்சத்து 57 ஆயிரத்து 230 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டத்தில் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 650 குடும்ப அட்டை, திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டத்தில் 83 ஆயிரத்து 416 குடும்ப அட்டைகள், இலால்குடி வட்டத்தில் 76 ஆயிரத்து 367 குடும்ப அட்டைகள், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 55 ஆயிரத்து 810 குடும்ப அட்டைகள், ஸ்ரீரங்கம் வட்டத்தில் 89 ஆயிரத்து 142 குடும்ப அட்டைகள், முசிறி வட்டத்தில் 68 ஆயிரத்து 649 குடும்ப அட்டைகள், தொட்டியம் வட்டத்தில் 40 ஆயிரத்து 453 குடும்ப அட்டைகள், துறையூர் வட்டத்தில் 77 ஆயிரத்து 163 குடும்ப அட்டைகள், மணப்பாறை வட்டத்தில் 65 ஆயிரத்து 430 குடும்ப அட்டைகள், மருங்காபுரி வட்டத்தில் 33 ஆயிரத்து 665 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. தற்போது முதற்கட்டமாக அச்சிட்டு வரப்பெற்ற 30 ஆயிரத்து 81 மின்னணு குடும்ப அட்டைகள் ; அனைத்தும்; பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக அனைத்து வட்டங்களுக்கும் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 171 மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பெற்றுள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் எட்டு இலக்க எண் அனுப்பப்படும். அக்குறுஞ் செய்தியில் பெறப்பட்ட எட்டு இலக்க எண்ணை விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்து பின் மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, தங்கள் அலைபேசிக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியை அழிக்காமல் பத்திரமாக வைத்திருந்து மின்னணு குடும்ப அட்டை பெற உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
மின்னணு குடும்ப அட்டைகள் அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். தங்கள் அலைபேசிக்கு அனுப்பப்பட்ட எட்டு இலக்க எண் ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது தற்சமயம் 15 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு ழுவுP வரப்பெற்ற நாளிலிருந்து 15 தினங்களுக்குள் நியாயவிலைக் கடை செயல்படும் வேலை நாட்களில் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று பெற்றுக்கொள்ளலாம். தங்களது அலைபேசிக்கு குறுஞ்செய்தி வரப்பெறாதவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விரைவில் வழங்கப்படும். அதற்கான குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்படும். அதுவரையில் தங்களது பழைய குடும்ப அட்டையையே பயன்படுத்தி ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் பெற்றுக்கொள்ளளாம். புதிய அட்டை விண்ணப்பிக்க பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கடை மாற்றம், குடும்பத்; தலைவர் மாற்றம் போன்ற காரணங்களுக்காக வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை. பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கருகிலேயே உள்ள பொது இ-சேவை மையத்தை அணுகி தங்களது கோரிக்கைகளை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அட்டை காணாமல் போனால் நகல் அட்டை பெறுவதற்கும், இந்த இ-சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
பொது விநியோகத் திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1967 அல்லது 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மின்னணு குடும்ப அட்டையில் பிழைகள் ஏதேனும் காணப்பட்டால் அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டு திருத்திக் கொள்ளலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு இதுவரை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 449 மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பபெற்று உள்ளன, அவற்றில் 1 இலட்சத்து 25 ஆயிரத்து 113 மின்னணு குடும்ப அட்டைகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பெற்றுள்ளது. இதர மின்னணு குடும்ப அட்டைகள் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர்(மணப்பாறை), எம்.செல்வராஜ்(முசிறி), மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, மலைக்கோட்டை ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.