எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - அ.தி.மு.க அம்மா, அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணிகள் இணைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று தனித்தனியே தங்களது அணியினருடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமியும், கே.பி. முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை ஒ.பி.எஸ் அணியினரும் அறிவித்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்து விட்டு ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் குழுவாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து தான் அ.தி.மு.கவிலிருந்து ஓதுங்கிவிட்டதாக தினகரன் தெரிவித்தார். இதனையடுத்து அ.தி.மு.கவில் இரு அணிகளையும் இணைப்பதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க ( அம்மா) அலுவலகத்தில் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி,கே.பி.அன்பழகன் மற்றும் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குழு அமைப்பு
இதன் பின்னர் மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த இணைப்பு தொடர்பாக யாரும் வெளியில் கருத்து தெரிவிக்க கூடாது என்று அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது நிபந்தனைகள் என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றை உங்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.யாரையும் ஒதுக்கிவிடுவோம் என்று கருத தேவையில்லை என்றும் அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுவே முதல் முறை
2 மணி நேர ஆலோசனைக்கு பிறகு முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். சசிகலாவோ, தினகரனோ இல்லாத நிலையில் முதல் முறையாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தலைமைக்கழகத்தில் ஆலோசனை நடத்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனையை தொடர்ந்து அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைத்திலிங்கம் தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
இதற்கிடையே தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதிய நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
7 பேர் குழு
அ.தி.மு.க இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வேலுமணி பேட்டி
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத் திற்கு பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் பேசினார். பேச்சுவார்த்தை குழு இணைப் பிற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவார்கள். அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது. இந்த குழு தான் கருத்துக்களை தெரிவிக்கும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும், இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதை நோக்கியே எங்களது பயணம் இருக்கும். எங்களுடைய நோக்கம் குறித்து நேற்றே அமைச்சர் வைத்திலிங்கம் தெளிவாக தெரிவித்துவிட்டார். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். இவ்வாறு வேலுமணி கூறினார்.
முனுசாமி தலைமையில் ....
இதற்கிடையே ஒ.பன்னீர்செல்வம் தரப்பில், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க குழு அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதனையடுத்து கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்தார். ஒ.பி.எஸ் அணியில், கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி, ஜே.சி.டி.பிரபாகரன், ம.ஃபோ.பாண்டியராஜன், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேற்கொண்ட குழு மதுசூதனன் மற்றும் ஒ.பி.எஸ் ஒப்புதலோடு அமைக்கப்பட்டதாக அந்த அணியினர் தெரிவித்தனர்.இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ஒ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.