முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் தமிழக விவசாயிகள் உச்சகட்டமாக சிறுநீர் குடிக்கும் போராட்டம்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி   - டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர்குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாள் தோறும் வித்தியாசமான போராட் டங்களை விவசாயிகள் நடத்தி வரு கின்றனர். எலிக்கறி, பாம்புக் கறி தின்றது, பாதி தலை மொட்டையடித் தது, சேலை அணிந்து ஊர்வலம் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன . அந்த வரிசையில் நேற்று தங்கள் சிறுநீரை தாங்களே குடிக்கும் வகையில் ஒரு பாட்டிலில் சிறுநீரை பிடித்து வைத்து அவற்றை குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகளை பிரதமர் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தாத வரை போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago