முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரித்த 8 பேர் பரிதாப பலி

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள தர்பார்பூர் என்ற கிராமத்தில், மணல் கொள்ளையில் ஈடுபடும் இரு கும்பல்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. காலை 10 மணி முதல் இரு கும்பல்களும் ஒருவர் மீது ஒருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர்.

இதனால் பெரும்பாலான கிராம மக்கள் ஊரை விட்டு ஓடிவிட்டனர். ஒரு பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டும் பலமணி நேரம் கதவை தாழிட்டுக் கொண்டு அச்சத்தில் உறைந்திருந்தனர்.

இந்நிலையில் ஒரு கும்பலுக்கு சப்ளை செய்வதற் காக அருகில் உள்ள டர்கா என்ற கிராமத்தில் 10 முதல் 15 பேர் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்