எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே : டோணியின் அதிரடியால் புனே சூப்பர் ஜியான்ட் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்துள்ளது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கடைசி பந்தில் டோணி வின்னிங் ஷாட் அடித்து பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது என ஏங்கிய ரசிகர்களுக்கு இன்று ஏக்கம் தீர்ந்தது.புனே நகரிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிராக, டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தது புனே.ஹைதராபாத் அணி 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த புனே அணியின் தொடக்க வீரர் ரஹானே 2 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 27 ரன்களிலும் வெளியேறினர்
17வது ஓவரின் முதல் பந்தில், புனே அணி 121 ரன்கள் எடுத்திருந்த முக்கிய கட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் மறுமுனையில் அசராமல் ஆடினார் டோணி. அவரது உடல் மொழி, ஷாட் தேர்வு போன்றவை டோணி மீண்டும் விஸ்வரூபம் எடுக்க போவதற்கான சமிக்ஞைகளை கொடுத்தபடியே இருந்தன.
17 ஓவர்கள் முடிவில் புனே அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 130 ரன்களை சேர்த்திருந்தது. எனவே 18 பந்துகளில், 47 ரன்கள் என்ற இமாலய இலக்கு புனே அணிக்கு எதிரே இருந்தது. என்னவாகுமோ என்ற பரபரப்பில் இருந்தனர் ரசிகர்கள். அப்போதுதான் புறப்பட்டது டோணியின் டிரேட் மார்க் ஷாட்டுகள்.
டோணியின் ஆவேசம்
சிராஜ் வீசிய அந்த ஓவரின் 4வது பந்தில் டோணி அபாரமாக லாங்-ஆன் திசையில் சிக்சர் விளாசினார். ஸ்லோவாக வீசிய அந்த பந்தை, தனது முழு பலம் கொண்டு அபாரமாக சிக்சராக மாற்றினார் டோணி. அடுத்த பந்திலேயே, பவுன்ஸ் செய்யப்பட்ட பந்தை அப்பர்-கட் செய்து பவுண்டரியாக மாற்றினார் டோணி. முன்னதாக திவாரி அடித்த பவுண்டரியின் உதவியால் ஓவர் முடிவில் 147 ரன்கள் எடுத்தது புனே.
பெஸ்ட் பவுலருக்கு ஹெலிகாப்டர் பரிசு
அடுத்ததாக 19வது ஓவரை வீச வந்தார் புவனேஸ்வர்குமார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் இவர்தான். பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் வெற்றி வாய்ப்பை பறித்தவர் இவர். ஆனால் அந்த சாதனைகள் டோணியின் ஆவேசத்தின் முன்பு தவிடு பொடியானது. முதல் பந்தை வைடாக வீசினார் புவனேஸ்வர் குமார். மீண்டும் அந்த பந்தை வீசியபோது டோணி பவுண்டரி விளாசினார். 2வது பந்தும் பவுண்டரி. 3வது பந்தில் சிக்சர் பறக்க அரங்கம் அதிர்ந்தது. அந்த சிக்சர் வெகுநாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஹெலிகாப்டர் ஷாட் மூலம் வந்தது சிறப்பு. 19வது ஓவர் முடிவில் புனே அணி 166 ரன்கள் எடுத்தது.
கோட்டை விட்ட கேட்ச்
கடைசி ஓவரில் புனே வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் ரசிகர்கள் நகம் கடித்தனர். அந்த ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். முதல் பந்திலேயே திவாரி பவுண்டரி விளாசினார். ஆனால், பவுண்டரி எல்லையில் ரஷீத் கேட்சை மிஸ் செய்ததால் அது பவுண்டரியானது. 2வது பந்தில் திவாரியும், 3வது பந்தில் டோணியும், 4வது பந்தில் திவாரியும் சிங்கிள் ரன் சேர்த்தனர். 5வது பந்தில் டோணி 2 ரன்கள் எடுத்தார். எனவே கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் டிரா, 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
பெஸ்ட் ஃபினிஷர்
கடைசி ஓவரில் ஏற்பட்ட த்ரில்லால் ரசிகர்கள் சீட் நுனிக்கு வந்தனர். அந்த பந்தை டோணி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் புனே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோணி வின்னிங் ஷாட்டை அடித்து போட்டியை முடித்து வைத்ததை பார்த்து வெகுநாட்களான ரசிகர்கள் துள்ளி குதித்தனர். அடுத்த வருடம் சிஎஸ்கேக்கு தலைமையேற்று டோணி காட்டப்போகும் ஹெலிகாப்டர் ஷாட்டுகளுக்கு இது முன்னோட்டம் என்று சிலாகித்தனர் நெட்டிசன்கள். டோணி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 61 ரன்களை குவித்து, காட்டுக்கு சிங்கம் யார் என்பதை காட்டிவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.