முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும்: முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கடல் காற்று தாமதமாக வீசுவதால் வெப்பம் அதிகரித்து உள்ளது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் குறித்து முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் கூறியதாவது:-

கடல் காற்று வீசுவதைப் பொறுத்தே சென்னையில் வெப்பத்தின் அளவில் ஏற்றம்-இறக்கம் ஏற்படுகிறது. காலை 10.30 மணிக்கு கடல்காற்று வீசத் தொடங்கினால் வெப்பத்தின் தாக்கம் குறையும். ஆனால் கோடை காலத்தில் மதியத்துக்கு மேல் தான் கடல் காற்று வீசத்தொடங்குகிறது. வெப்பம் நிறைந்த தரைக் காற்றின் வேகம் குறைந்த பின்னரே கடல் காற்று வீசத் தொடங்குகிறது. தற்போது கடல் காற்று தாமதமாக வீசுவதால் வெப்பம் அதிகரித்து உள்ளது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்