எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (24.04.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்; 549 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர். முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் வீதம் 15 இலட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையினையும், 36 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும், 02 நபர்களுக்கு விதவை உதவித்தொகையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூபாய் 86 ஆயிரத்திற்கான திருமண உதவித் தொகையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினையும், 2014-2015ஆம் ஆண்டு சிறந்த சேவை புரிந்தமைக்காக மணப்பாறை வட்டம் இடையப்பட்டியான்பட்டி கிராமம் ‘நேரு இளைஞர் நற்பணி மன்றம்’ தேர்வு செய்யப்பட்டு மன்றத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், 2015-2016 ஆம் ஆண்டு சிறந்த சேவை புரிந்தமைக்காக திருச்சி புதுவை நகர் பகுதியில் உள்ள ‘டாக்டர்.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம்’ தேர்வு செய்யப்பட்டு மன்றத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றினையும், மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிலிருந்து பழனி தைப்பூச திருவிழாவிற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் 7463 ஒளிரும் பட்டைகள் தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டது அதற்கான தொகை ரூபாய் 37 ஆயிரத்து 315 க்கான காசோலையும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லையில் உள்ள 19 மையங்களில் சிகிச்சை பெற்று வரும் 227 காசநோயாளிகளுக்கு தினந்தோறும் முட்டைகள் வழங்க மாதம் ஒன்றுக்கு ரூபாய் 40 ஆயிரம் வீதம் மூன்று மாதங்களுக்கான தொகை ரூபாய் 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மரக்கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நீதிமன்ற ஆணையின்படி அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்கள் இருந்த இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்திடவும், மாவட்ட நலப்பணி நிதிக்குழு சார்பில் ரூபாய் 26 ஆயிரத்து 240க்கு 3280 மரக்கன்றுகள் கொள்முதல் செய்வதற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட நலப்பணி நிதிக்குழு சார்பாக திருச்சிராப்பள்ளி கீழதேவதானம் பத்மாவதி என்பவரது மகன் (வயது17) விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டு நடக்கமுடியாமல் உள்ளதால் அவரின் மருத்துவ உதவியாக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையும், திருச்சிராப்பள்ளி ஜீவா நகரை சேர்ந்த மாணவி உமாமகேஷ்வரி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1073 மதிப்பெண்கள் பெற்று தற்பொழுது பி.காம் முதலாமாண்டு படிக்க கல்வி நிதியுதவியாக ரூபாய் 5 ஆயிரத்திற்கான காசோலையும், இலால்குடி வழுதியூர் கிராமத்தை சேர்ந்த மாணவி மிரோஸிலின் மோனிகா இளங்கலை இயற்பியல் பிரிவில் முதலாமாண்டு படிக்க கல்வி உதவித்தொகை ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் கோகுல் என்பவருக்கு ரூபாய் 7 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையினையும், 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் முகேஸ்வரன் என்பவருக்கு ரூபாய் 10 ஆயிரத்து 500க்கான பரிசுத் தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 44 பயனாளிகளுக்கு ரூபாய் 19 இலட்சத்து 12 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி