முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைப்பதை எதிர்த்து வழக்கு

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  கூடங்குளத்தில் 4 புதிய அணு உலைகள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுஉலை பூங்கா வளாகத்தில் அமைய உள்ள 3 மற்றும் 4-வது அலகு மற்றும் 5 மற்றும் 6வது அலகுகள் அமைப்பதற்கு, கடந்த 2012ம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

அவர்கள் அளித்துள்ள மனுவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அரசு பல லட்சம் கோடி இழப்பீடாக வழங்க வேண்டி வரும் என்றும் அதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெற வேண்டும் என்றும் அப்படி ஒப்புதலைப் பெறுவதற்கான வழிவகை கூடங்குளம் ஒப்பந்தத்தில் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தன. இந்த அணு உலை மக்களுக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.இது தொடர்பாக வழக்கு இன்று விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. அப்போது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஜூலை மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago