முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      தேனி
Image Unavailable

  தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 197 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
  இக்கூட்டத்தில், கணவரை இழந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்ற பெரியகுளம் வட்டம், வு.பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திருமதி.அறிவகம், க.பெ.(லேட்) நாகராஜ் என்பவருக்கு வாழ்க்கை மேம்பாட்டிற்காக  மாவட்ட கலெக்டர் அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரத்தினை மாவட்ட கலெக்டர்  வெங்கடாசலம், வழங்கினார்.
       இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.பொன்னம்மாள் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட தாட்கோ பொது மேலாளர் தங்கவேல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்