முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

வேலை வாய்ப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 25 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்; குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 208 என மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பாஸ்கர்(மயிலாடுதுறை), வெற்றிவீரன்(சீர்காழி) ஆகியோருக்கு தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.40,000 மதிப்பிலான நவீன சக்கர நாற்காலிகளை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.தேன்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்சந்திரமோகன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்