முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி வான்வழித் தாக்குதலில் குர்து வீரர்கள் 18 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

டாமாஸ்கஸ்  - சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.  இதுகுறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிரிய கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் பலியாகினர். தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் குர்து படையைச் சேர்ந்தவர்கள்" என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக குர்து படையினர் துருக்கியில் அவ்வப்போது குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் குர்து படையினருக்கு எதிராக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்