முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி தர்மராஜா கோயில் அக்னி வசந்த விழாவில் நாடக நிகழ்ச்சி துவக்க விழா

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதர்மராஜா கோயிலில் நடைபெற்று வரும் அக்னி வசந்த விழாவில் திங்கள்கிழமை இரவு முதல் நாடக நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது.

துவக்க விழா

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதர்மராஜா கோயிலில் ஏப்ரல் 2 அன்று அக்னி வசந்த விழா துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை இரவு முதல் நாடக நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது. இத்துவக்க விழாவில் ஆரணி நகர இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி துவக்கி வைத்தார். விழாக்குழுத்தலைவர் கப்பல் இ.கங்காதரன் அனைவரையும் வரவேற்றார். தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஜெ.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மேலும் இதில் ஆலயக்குழு நிர்வாகிகள் கே.ஆர்.சண்முகம், ஏ.ராஜேந்திரன், பட்டி ஜி.அண்ணாமலை, ஆர்.சரவணன், என்.கோட்டீஸ்வரன், மார்கபந்து, அண்ணாதுரை, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்