முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய மாணவர்கள் சங்க தொடக்க விழா

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம்ட  அருகே அய்யனார்புரம் சர்வ சேவா மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் தொடக்க விழா நேற்று நடந்தது. சர்வசேவா பள்ளிகளின் செயலாளர் வசந்தா தலைமை தாங்கினார்,  பால்வள திட்ட பொறுப்பாளர் மகேந்திரன், தலைமையாசிரியர்கள் தனம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழாசிரியர் முத்துமீனாள் வரவேற்றார். இந்த விழாவில் சங்க அமைப்பாளர்கள் அறிமுகம்,மாணவர்கள் அனுபவ பகிர்வு போன்றவற்றை பற்றியும்  பேச சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் பழைய மாணவ,மாணவியரும்  கலந்து கொண்டு பேசினார்கள்.
 சர்வசேவா பள்ளியின் செயலாளர் வசந்தா தலைமையுரையாக தமிழகத்தில் பல பள்ளி, கல்லு£ரிகளில் முன்னாள் சங்கம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இவ்வமைப்புகள் தம்முடைய முன்னாள் மாணவர்களையும் இந்நாள் மாணவர்களையும் இணைக்கும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும்போதோ இவ்வமைப்புகளின் கூட்டம் கூட்டப்பெற்று அந்த ஆண்டில் நடைபெற்ற பணிகள், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படுத்த வேண்டிய மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் போன்றவற்றை பற்றிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும் என்று பேசினார்,
விழாவில் தேர்வுகள், கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் பழைய மாணவர் குட்டுப்பட்டி ராஜபிரபு தலைவராகவும்,உபதலைவராக சேத்து£ர் சுப்பிரமணியனும், செயலாளராக டி.நகர் கீர்த்தனாவும், செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராஜேந்திரன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் பழைய மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. முடிவில் அய்யனார்புரம் தலைமையாசிரியை மலர்விழி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்