எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படைவீரர் அழகுபாண்டியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20லட்சம் நிவாரண நிதியை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.
மத்திய ரிசர்வ் படைவீரர் வீரமரணம்;:
திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகேயுள்ள முத்துநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் பிச்சையழகு-ராக்கம்மாள் தம்பதியரின் மூத்த மகனான அழகுபாண்டி(29)என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையில் வீரராக பணியாற்றிவந்தார். சம்பவத்தன்று சுக்மா மாவட்டத்திலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சாலையமைக்கும் பணிகளுக்கு 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படைவீரர்கள் காவல் புரிந்து வந்துள்ளனர்.அப்போது படைவீரர்களின் கண்களில் படாமல் 300க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஒன்றாக திரண்டுள்ளனர்.பின்னர் துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் மத்திய ரிசர்வ் படைவீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் பங்கர தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் தமிழக வீரர்கள் 3பேர் உட்பட 26 போலீசார் பலியாகினர்.இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகேயுள்ள முத்துநாகையாபுரத்தைச் சேர்ந்த வீரர் அழகுபாண்டி(29) வீரமரணமடைந்தார்.திருமணமாகாத இவருக்கு தற்போது ராணுவத்திற்கு தேர்வாகியுள்ள பவித்தாரன் என்ற தம்பியும்,சத்யா,நித்யா என்ற திருமணமான இரு தங்கைகளும் உள்ளனர்.
ரூ.20லட்சம் நிவாரணநிதி அறிவிப்பு:
மாவோயிஸ்டுகள் தாக்குதலில் திருமங்கலம் அருகேயுள்ள முத்துநாகையாபுரத்தைச் சேர்ந்த வீரர் அழகுபாண்டி வீரமரணமடைந்ததை தொடர்ந்து முத்துநாகையாபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.மேலும் அழகுபாண்டியின் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படும் வரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,கூட்டமாக திரண்டிருந்த கிராமமக்கள் கதறியழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது. இந்நிலையில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர் அழகுபாண்டியின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்;பில் நிவாரண நிதியாக ரூ.20லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி அறிவித்தார்.அதனிடையே பலியான படைவீரரின் உடல் வருவதற்கு முன்னதாக தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் முத்துநாகையாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று வீரமரணமடைந்த அழகுபாண்டியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விமானம் மூலம் உடல் மதுரை வருகை:
இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியான தமிழக வீரர் அழகுபாண்டியின் உடல் விமானம் மூலம் நேற்று மாலை தனிவிமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ராணுவீரர்கள் அணிவகுப்புடன் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்பட்ட வீரர் அழகுபாண்டியின் உடலுக்கு மதுரை விமானநிலையம் முன்பாக மரியாதை செலுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்,மாவட்ட எஸ்.பி.,விஜயேந்திரபிதாரி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள். இதையடுத்து தமிழக வீரர் அழகுபாண்டியின் உடல் அவரது சொந்த ஊரான முத்துநாகையாபுரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நிவாரணநிதி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்:
இந்நிலையில் முத்துநாகையாபுரம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட தமிழகவீரர் அழகுபாண்டியின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் அழகுபாண்டியின் பெற்றோர் பிச்சையழகு-ராக்கம்மாள் ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரணநிதியாக ரூ.20லட்சத்திற்காக காசோலையை அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் வழங்கினார்.பின்னர் நாட்டிற்காக வீரமரணடைந்த தனது மகனின் நினைவான கதறியழுத அழகுபாண்டியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல் கூறினார்.
அஞ்சலி நிகழ்சிகளில் கலந்து கொண்டோர்:
மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி, மாவட்ட கழக துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன்,திருமங்கலம் ஒன்றிய துணை செயலாளர் சுகுமார்,உசியம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா,பேரையூர் தாசில்தார் உதயசங்கர் மற்றும் அதிகாரிகள் அப்போது உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.