முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      திருநெல்வேலி
Image Unavailable

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நெல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளனர

 

 

பல்வேறு கோரிக்கைகள்

 

பி.எஸ்.என்.எல். இளநிலைத் தொலைத்தொடர்பு அதிகாரிகள், உதவிக் கோட்டப் பொறியாளர்களின் ஊதிய விகிதத்தை குறைக்கும் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்தும், நேரடி நியமனம் பெற்ற அதிகாரிகளின் ஓய்வூதிய சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

 

உண்ணாவிதரம்

வண்ணார்பேட்டையில் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு, கூட்டமைப்பின் செயலாளர் கோமதிசங்கர் தலைமை தாங்கினார் இதில் நிர்வாகிகள் சந்திரசேகர், விஜயமணிகண்டராஜ், முத்து, விஜய்கிருஷ்ணா, பாஸ்கரன், பாலசந்திரன் உள்ளிட்டோர் பேசினர் , இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க நிர்வாகிகள் சூசை மரிய அந்தோணி,ராஜகோபால்,சூசை உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை இன்று (ஏப்.27) தொடர் உண்ணாவிரதப் போராட்டமும், நாளை வெள்ளிக்கிழமை (ஏப். 28) ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்