முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டம் : விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

திருச்சி  - மே 25ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடரும் என திருச்சி வந்த விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

40 நாட்களாக
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர், வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கடந்த 40 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

திருச்சியில் வரவேற்பு
இந்நிலையில் போராட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய விவசாயிகள் ரயில் மூலம் திருச்சி சென்றனர். திருச்சி ரயில் நிலைய நுழைவு வாயிலில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு, மே 25-ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார். மேலும், போராட்டத்தை ஒடுக்க நினைத்து மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்பட்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்