முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் பள்ளி மாணவர்களுக்கு உதவிய முதியவர்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தூத்துக்குடி
Image Unavailable

 

திருச்செந்தூர் பள்ளி மாணவர்களுக்கு முதியோர் ஒருவர் கோவிலில் தூய்மைப்பணி செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மதிய உணவினை வழங்கினார். 

தூய்மைப்பணி

 சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலங்கிணற்றைச் சேர்ந்த புல்பாண்டியன் (64). இவரது மனைவி இறந்துவிட்டதால், குடும்பத்தாரின் ஆதரவின்றி, திருச்செந்தூர் கோவிலில் தூய்மைப்பணி செய்து தனது வாழ்க்கையை கழித்து வந்தார். கோவிலில் கிடைத்த வருவாயை கொண்டு, கும்பகோணம், கொத்தங்குடி, பன்னம்பாறை, படுக்கப்பத்து, ஆலங்கிணறு, சங்கரன்குடியிருப்பு, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவி செய்து வந்தார்.

நலத்திட்ட உதவி

 இந்நிலையில், திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையில் உள்ள கற்றலின் இனிமை தொடக்கப்பள்ளியில், புல்பாண்டியன் நலத்திட்ட உதவி மற்றும் மதிய விருந்து வழங்கினார். புல்பாண்டியனுக்கு நன்றி தெரிவித்த பள்ளி தலைமையாசிரியை சி.சிவகாமி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் அவருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்