முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டம், மணிபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், குக்கல் ஊராட்சிக்குட்பட்ட மணிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் திரு கே. விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவி பெறும் 9 பயனாளிகளுக்கு ரூ. 10 இலட்சத்து 80 ஆயிரமும், குடிமைப்பொருள் வழங்கல் (ளுஅயசவ ஊயசன) சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ. 1 இலட்சத்து 21 ஆயிரமும், வேளாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு திரவ உயிர் உரம் 1 லிட்டர், அசோஸ்பைரில்லம் ½ லிட்டர், பாஸ்போபாக்டிரியா ½ லிட்டரும், 1 பயனாளிக்கு நுண்ணூட்ட சத்து, பயறு வகை 5 கிலோ, 2 பயனாளிகளுக்கு புளுரோட்டஸ் கிட் ரூ. 1 ஆயிரத்து 125ஃ- மதிப்பிலும், சான்றிதழ்கள் 26 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாற்றம் 26 பயனாளிகளுக்கும் என மொத்தம் 81 பயனாளிகளுக்கு ரூ. 12 இலட்சத்து 13 ஆயிரத்து 125ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது :-

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கே இணைந்து மாதந்தோறும் கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 456 வருவாய் கிராமங்கள் உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் முன்மாதிரி கிராமமாக 10 கிராமங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் தருமபுரி வட்டம், குக்கல்மலை கிராமம் ஒன்றாகும். இக்கிராமத்தில் பல்வேறு துறையின் மூலமாக முன்னுரிமை அடிப்படையில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். தற்போது 4-வது சுற்று நிறைவடைந்து 5-வது சுற்று நடைபெற்று வருகிறது. மேலும் இம்முகாம்களில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை வேளாண்மை பொறியியல் துறை, மருத்துவ சுகாதாரத்துறை, புதுவாழ்வுத் திட்டம் என அரசின் பல துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த பதாகைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான அரசு திட்டங்களை கேட்டறிந்து பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் தொழிலாளர் நலத்துறையில் உறுப்பினராக சேர்ந்துக் கொண்டால் விபத்துக் காலத்தில் ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையும், விபத்தில் ஊனமுற்றல் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 4 இலட்சமும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்காக தமிழக அரசு வழங்குகிறது. மருத்துவ சிகிச்சைக்குறித்து ஏதேனும் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டணமில்லா தொலைபேசி எண். 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் மருத்துவங்கள் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜாதி சான்று, வருமானம் சான்று, இருப்பிடச்சான்றிதழ் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் எனவும், பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் அறிய வேண்டுமெனில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ் அப் எண். 8903891077 ஆகிய எண்களின் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மற்றும் புகார்களையும் கூறலாம். மேலும் அம்மா கைபேசி எண். 1100 எண்ணின் மூலமாக தங்களது குறைகளையும் மற்றும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.

முன்னதாக 308 மனுக்கள் பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடி தீர்வு காண வேண்டும் எனவும், கிராம நிர்வாக அலுவலர்கள்மற்றும் வருவாய் உதவி ஆய்வாளர்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிய கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என இம்முகாமில் கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.

இம்முகாமில் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், தனித்துணையாட்சியர் (ச.பா.தி) குப்புசாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் இலாஹிஜான், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குநர் பழனிசாமி, தாட்கோ மேலாளர் வைத்தியநாதன், பால்வள துணைத்தலைவர் பெரியசாமி, வட்டாட்சியர் சரவணன் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago